Poorana Kozukattai: வரலட்சுமி விரத ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி? ...பூஜையில் கட்டாயம் வைக்க வேண்டும்

Published : Aug 04, 2022, 10:52 AM IST

Poorana Kozukattai: வரலட்சுமி விரத பூஜை அன்று அம்மனுக்கு பிடித்தமான பூரணம் கொழுக்கட்டையை சுலபமாக பக்குவமாக எப்படி செய்வது என்பதைப் பற்றி  இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.

PREV
14
Poorana Kozukattai: வரலட்சுமி விரத ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி? ...பூஜையில் கட்டாயம் வைக்க வேண்டும்
poorana-kozukattai

ஸ்ரீவரலட்சுமி விரத பூஜை நாளில் அம்மனுக்கு பிடித்தமான பூரணம் கொழுக்கட்டையை சுலபமாக பக்குவமாக எப்படி செய்வது என்பதைப் பற்றி  இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.  சில பேர் வீடுகளில், கடையிலிருந்து வாங்கிய மாவில் கொழுக்கட்டை செய்தால், கொழுக்கட்டை சூடாக இருக்கும்போது மேல் மாவு சாஃப்டாக இருக்கும். அதுவே கொழுக்கட்டை ஆறி விட்டால், கொழுக்கட்டையின் மேல் மாவு ஹார்டாக மாறிவிடும். சில நேரம் கொழுக்கட்டையில் விரிசல் விழும் அல்லது உடைந்து போகும். எனவே, இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க, என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ் உங்களுக்காக.

மேலும் படிக்க....Varalakshmi: வரலட்சுமி விரதம் பூஜையில் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத 5 விஷயங்கள், கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

24
poorana-kozukattai

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு - 1கப்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

சிறிதளவு உப்பு

தேங்காய் - 1 கப் அளவு 

வெல்லம் -1 கப் அளவு 

நெய் - 1 ஸ்பூன் 

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்


 

34
poorana-kozukattai

செய்முறை விளக்கம்: 

1. அடி கனமான ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி, முதலில் தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காயை போட்டு ஒரு நிமிடம் வதக்கி, அதன் பின்பு தயாராக எடுத்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து வதக்கவேண்டும். 

2. வெள்ளம் சூட்டில் உருகி கரைந்து தேங்காயோடு சேர்த்து கொஞ்சம் தளதளவென வரும். தேங்காயும் வெல்லமும் சேர்த்து கொஞ்சம் கெட்டி பதம் வரும் வரைக்கும் நன்றாக கலந்து விட்டு கொண்டே இருங்கள். 

3. அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டால். இந்த பூரணம் கொஞ்சம் இலகியது போல் இருந்தாலும் பரவாயில்லை. ஆறிய பின்பு கெட்டியாக மாறி விடும். இந்த பூரணம் அப்படியே இருக்கட்டும்.
 

44
poorana-kozukattai

4. தற்போது பிசைந்த மாவை சிறு உருண்டையாக எடுத்துக்கொள்ளுங்கள். பின் சிறிய வாழை இலையில் எண்ணெய் தடவி அதில் மாவை வடை போல் தட்டி அதன் நடுவே ஒரு ஸ்பூன் பூரணம் வைத்து அப்படியே மடித்துவிட்டு ஓட்டைகளின்றி மூடி விடுங்கள்.

5. உருண்டையாக வேண்டுமெனில் உருட்டி பின் பூரணம் வைத்து மூட வேண்டும். பின்னர் செய்து வைத்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 3 அல்லது 4 நிமிடம் வேக வைத்தால் சுவையான இனிப்பு பூரணம் கொழுக்கட்டை பூ போல் தயார். இப்படி ஒரு முறை செய்து, அம்மனின் மனம் குளிர நைவேத்தியம் செய்து அவளது ஆசியை பெறுங்கள்.  

மேலும் படிக்க....Varalakshmi: வரலட்சுமி விரதம் பூஜையில் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத 5 விஷயங்கள், கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories