Gardening Tips: வீட்டில் தோட்டம் வைக்க ஆசையா? ஆனால், பெரிய இடமோ, நேரமோ இல்லையா? கவலைப்படாதீங்க. துளசி, புதினா போன்ற 5 இந்திய மூலிகைகளை ரொம்ப சுலபமாக உங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம். அதற்கான சிம்பிள் டிப்ஸ் இதோ.
வீட்டில் ஃப்ரெஷ்ஷான மூலிகைகளை வளர்க்க வேண்டும் என்றால், பெரிய தோட்டம் வேண்டும், அல்லது தோட்டக்கலையில் நாம் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்தியாவைச் சேர்ந்த சில மூலிகைகளை சின்ன தொட்டியிலேயே ஈஸியாக வளர்க்க முடியும்.
இது சமையலுக்குத் தேவையான ஃப்ரெஷ் மூலிகைகளைத் தருவது மட்டுமில்லாமல், வீட்டுக்கும் ஒரு பசுமையான அழகைக் கொடுக்கும். அப்படி சுலபமாக வளர்க்கக்கூடிய இந்திய மூலிகைகள் என்னென்ன என்று யோசிக்கிறீர்களா? ஆரம்ப நிலையில் இருப்பவர்கள்கூட முயற்சி செய்யக்கூடிய சில செடிகள் குறித்து பார்ப்போம்.
26
துளசிச் செடி
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் துளசிச் செடியை பார்க்கலாம். இது தொட்டிகளில் நன்கு வளரும். போதுமான சூரிய ஒளியும், தண்ணீர் தேங்காத மண்ணும் அவசியம். பழைய இலைகளையும் பூக்களையும் அடிக்கடி கத்தரித்து விட்டால், புதிய வளர்ச்சி அதிகரிக்கும். தொட்டியில் அதிக தண்ணீர் தேங்கினால் வேர் அழுகிவிடும், கவனம்.
துளசிச் செடி ஆன்மிக முக்கியத்துவம் மட்டுமின்றி, சிறந்த மூலிகை மருத்துவக் குணங்களையும் கொண்டது. இதன் இலைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகள் சளி, இருமல் மற்றும் தொண்டை புண்ணைக் குணப்படுத்த பெரிதும் உதவுகின்றன. மேலும், வீட்டின் காற்று மண்டலத்தைச் சுத்திகரித்து, கொசுக்கள் போன்ற பூச்சிகளை விரட்டும் இயற்கையான காரணியாகவும் துளசி செயல்படுகிறது.
36
கறிவேப்பிலை செடி
இந்திய சமையலறைக்கு கறிவேப்பிலை செடி ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். இந்த செடிக்கு மிதமான வெப்பமும், நிறைய சூரிய ஒளியும், தண்ணீர் தேங்காத மண்ணும் பிடிக்கும். இளம் செடி வேர் பிடித்து வளர கொஞ்சம் டைம் எடுக்கும், அதனால் பொறுமை அவசியம். தொட்டியில் வளர்த்தால், சூழல் சரியில்லாதபோது வீட்டுக்குள்ள எடுத்து வைக்க வசதியாக இருக்கும்.
செடி அடர்த்தியாகவும் கிளைகள் விட்டுக் கொத்தாகவும் வளர, அதன் நுனிப்பகுதியைத் அவ்வப்போது கிள்ளி விட வேண்டும் . செடிக்கு ஆட்டு உரம், மாட்டு உரம் அல்லது மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்கள் கொடுப்பது இதன் வளர்ச்சியைத் தூண்டும்.
புதினா ரொம்ப சுலபமாக வளரக்கூடிய இன்னொரு மூலிகை. இது வேகமாக பரவும், அதனால் தொட்டியில் வளர்ப்பதுதான் பெஸ்ட் ஆப்ஷன். மண் லேசான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும், செடிக்கு நல்ல வெளிச்சம் தேவை. ஆனால், அதிக வெயில் காலங்களில் மதிய நேர வெயிலில் இருந்து செடியைப் பாதுகாப்பது நல்லது.
56
கொத்தமல்லி செடி
கொத்தமல்லியை சில விதைகளை வைத்தே தொட்டியில் எளிதாக வளர்க்கலாம். வேர் பாதிக்கப்படாமல் இருக்க, ஈரமான, தண்ணீர் தேங்காத மண்ணில் விதைகளை விதைக்க வேண்டும். சூரிய ஒளியும், ஈரப்பதமும் நாற்றுகள் சரியாக வளர உதவும். செடி நன்கு வளர்ந்ததும், இலைகளைப் பறித்து பயன்படுத்தலாம்.
66
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரை வீட்டில் வளர்க்கக்கூடிய கீரை வகைகளில் மிகவும் சுலபமானது. வெந்தய விதைகளை நேரடியாக தொட்டியில் விதைக்கலாம். நல்ல வடிகால் வசதி, போதுமான ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி இருந்தால் போதும், செடி நன்றாக வளரும்.
வெந்தயக் கீரை விதைத்த 3 முதல் 5 நாட்களில் முளைக்கத் தொடங்கி, 20 முதல் 25 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். பால்கனி அல்லது சன்னல் ஓரங்களில் சிறிய தொட்டிகளிலேயே இதை எளிதாக வளர்க்கலாம். அடிக்கடி அறுவடை செய்து சமையலுக்குப் பயன்படுத்துவது செடியின் புதிய வளர்ச்சியைத் தூண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.