செய்முறை
முதலில், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பன்னீரை சிறுசிறு துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், தாளிப்பதற்கு தேவையான பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர், அதில் வெங்காயத்தைப் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, பின் தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு, அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பை தூவி சிறிது நேரம் கிளறி விட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனித்தனியாக பிரியும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
Chappathi With Kuruma : சப்பாத்திக்கு ஒரு புதுவித சைட் டிஸ் ''காலிப்ளவர் பட்டாணி குருமா''!
இறுதியாக அதில் நறுக்கி வைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, இரண்டு நிமிடம் வரை வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால் ருசியான கடாய் பன்னீர் ரெடி!