நம்முடைய முகத்தில் உள்ள சுருக்கத்தை நீக்குவதிலும் வாழைப்பழத் தோல் நன்கு வேலை செய்கிறது. இந்த தோலை நன்கு மசித்து அதனுடன் முட்டையின் மஞ்சள் கருவை கலந்து முகத்தில் பூசி ஐந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். அதன் பிறகு முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். இதனை அடிக்கடி செய்யலாம்.
பூச்சி கடிக்கும் போது உடனடியாக மருத்துவம் செய்வதில் வாழைப்பழத் தோலின் பங்கு அளப்பரியது. கொசுக்கடி அல்லது பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழ தோலை கொண்டு மசாஜ் செய்வதால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அரிப்பும் குறையும்.
இதையும் படிங்க: உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பச்சை பப்பாளி.. கட்டாயம் வாரம் ஒருமுறை சாப்பிடணும்.. ஏன் தெரியுமா?