Avaaram Poo: ஆவாரம் பூவின் வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்...பெண்களுக்கு தலை முதல் கால் வரை பலன் உண்டு...

Published : Jul 24, 2022, 01:05 PM IST

Avaaram Poo: ஆவாரம் பூ மூலிகை மருத்துவ குணம் கொண்டுள்ள ஓர் அருமருந்து ஆகும். பல்வேறு வழிமுனைகளில் பயன்படுத்தும் இந்த ஆவாரம் பூவின் மருத்துவ நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

PREV
15
Avaaram Poo: ஆவாரம் பூவின் வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்...பெண்களுக்கு தலை முதல் கால் வரை பலன் உண்டு...
Avaaram Poo:

ஆவாரம் பூவின் இலை, பூ, பட்டை உள்ளிட்ட தலை முதல் கால் வரை அனைத்தும் பல்வேறு மருத்துவ குணம் கொண்டுள்ளது. ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து சாப்பிடலாம். இந்த பூவை கொதிக்க வைத்து தேநீர் போட்டும் குடிக்கலாம். ஆவாரம் பூ, சர்க்கரை வியாதி,  சிறுநீரக பிரச்சனை, பெண்களின் மாதவிடாய் கோளாறு, குடல் புண், தலைமுடி வளர்வது உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளது.

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்னும் 4 நாட்களில் மீனத்தில் குரு பெயர்ச்சி...இந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாய் மாறும்...
 

 

 

25
Avaaram Poo:

முடி உதிர்வு பிரச்சனை:

ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். அதுனுடன்  எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும். நீண்ட நாள் பொடுகு தொல்லை நீங்கும். 

35
Avaaram Poo:

நீரழிவு நோய்க்கு:

உலர் ஆவாரம்பூவை பொடித்து செய்யப்படும் பானம் மிகவும் சிறந்தது. ஆவாரம் பூ பொடி, பனங்கருப்பட்டி, ஏலக்காய் விதைகள் சேர்த்து பானமாக்கி குடிக்கலாம். தேனும் அளவாக பயன்படுத்தலாம். இது நீரழிவு நோய்க்கு சிறந்த பானமாகவும் இருக்கும்.

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்னும் 4 நாட்களில் மீனத்தில் குரு பெயர்ச்சி...இந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாய் மாறும்...

45
Avaaram Poo:

உணவாகும் ஆவாரம் பூ:

ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.

கண்களுக்கு சிறந்தது:

சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாக, ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சருமத்தில் வீக்கம் இருந்தால் பட்டை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கப்பட்டு சுத்தம் செய்து வந்தால் படிப்படியாக வீக்கம் குறைக்கும்.

55

ஆவாரம் பூ டீ:
 
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த ஆவாரம் பூவை வாங்கி, ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். பின்பு  அதை வடிகட்டி பருகலாம். தேவைப்பட்டால் அதில் மலைத்தேன் சேர்த்து குடிக்கலாம். ஒருவேளை பொடியாக கிடைத்தாலும் அதை கொதிக்க வைத்தே வடிகட்டி பருகலாம்.இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி சரியாகும் 

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்னும் 4 நாட்களில் மீனத்தில் குரு பெயர்ச்சி...இந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாய் மாறும்...

Read more Photos on
click me!

Recommended Stories