இந்த ஒரு பொருளின் புழக்கம் வீட்டில் எப்போதும் இருந்தால் போதும்.உங்களை பிடித்த பீடை விலகும், ஐஸ்வரியம் பெருகும்

Published : Sep 10, 2022, 10:29 AM ISTUpdated : Sep 10, 2022, 02:44 PM IST

Santhanam Payangal in tamil: அடமானம் வைத்த நகை திரும்ப வரவும், வீட்டில் இருக்கும் தங்கம் மேலும் பெருகவும், இந்த ஒரு பொருளை மட்டும் தினந்தோறும் அதிக அளவு உபயோகித்து வந்தால் போதும் தங்கம் நம் வீடு தேடி வந்துவிடும்.

PREV
16
இந்த ஒரு பொருளின் புழக்கம் வீட்டில் எப்போதும் இருந்தால் போதும்.உங்களை பிடித்த பீடை விலகும், ஐஸ்வரியம் பெருகும்
Vastu tips

நம்முடைய அவசர தேவைகளுக்கு பணம் தேவை என்றால், முதலில் நாம் செய்யும் காரியம் நகையை அடமானம் வைப்பது தான். சிலர் உடனே மீட்டு கொள்கின்றனர். ஆனால். சிலருக்கு நாம் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அடுத்தடுத்த பிரச்சனை வந்து சேர்ந்து நம்மை கடனாளியாகி மாற்றி விடும்..இதனால், குடும்பத்தில் வறுமை, தடை, பீடை போன்றவை நம்மை சூழ்ந்து கொள்ளும்.

மேலும் படிக்க...சமையலறையில் அடிக்கடி எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகள் உலா வருவதை தடுக்க..ரொம்பவே உபயோகமாக 5 கிச்சன் டிப்ஸ்.. 

26
Vastu tips

எனவே, இவற்றில் இருந்து நாம் விடுபட அடமானம் வைத்த நகை திரும்ப வரவும், வீட்டில் இருக்கும் தங்கம் மேலும் பெருகவும், இந்த ஒரு பொருளை மட்டும் தினந்தோறும் அதிக அளவு உபயோகித்து வந்தால் போதும் தங்கம் நம் வீடு தேடி வந்துவிடும். அதற்கு நாம் முதலில், பூஜைக்கு பயன்படுத்தும் சந்தன கட்டை வாங்கி கொள்ள வேண்டும். பவுடர் சந்தனங்களை விட சந்தன கட்டை சிறந்தது. இந்த பரிகாரத்திற்கு நிச்சயமாக சந்தன கட்டை தான் பயன்படுத்த வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் சுத்தமான சந்தன கட்டை கிடைக்கும். அதையே வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 

36
Vastu tips

அதற்கு முதலில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சந்தன கட்டை  வாங்கி கொள்ளுங்கள். அதனை எப்போதும் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால், வீட்டில் நிறைவான ஐஸ்வரியம் பெருகும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். வீட்டில் எப்போதும் நிறைவான லட்சுமி கடாட்சம் இருக்கும். பிறகு இந்த சந்தனத்தை பன்னீர் தெளித்து இழைத்து உங்கள் சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்கும் போது மஞ்சளுக்கு பதிலாக இதையே உபயோகப்படுத்தி வாருங்கள்.

46
Vastu tips

அடுத்ததாக பன்னீருடன் சந்தனம் சேர்த்து குழைத்து நிலை வாசலில் தெளித்து வாருங்கள். ஏன் என்றால் வீட்டில் தெய்வம் வந்து வாசம் செய்யும். எனவே கட்டாயமாக இப்படி பன்னீர் உடன் சந்தனம் சேர்த்து தெளித்து வாருங்கள். அது மட்டும் இன்றி குளித்து முடித்து தினம் தோறும் நெற்றியில் சந்தன போட்டு வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...சமையலறையில் அடிக்கடி எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகள் உலா வருவதை தடுக்க..ரொம்பவே உபயோகமாக 5 கிச்சன் டிப்ஸ்.. 

56
Vastu tips

இந்த சந்தன கட்டை பூஜை அறையில் தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது, இதை நீங்கள் பணம் வைக்கும் இடத்திலும், அதே போல் நகை வைக்கும் பீரோவில், நகையில் படும் படியாகவும் சிறு சிறு சந்தன சக்கையை வைத்து விடுங்கள். நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால் கல்லாப்பெட்டி வைக்கும் இடத்தில் பன்னீருடன் சந்தனம் சேர்த்து பொட்டு வைத்து, அதிலும் ஒரு சிறியத்துண்டு சந்தனத்தை வைத்து விடுங்கள்.

 

66
Vastu tips

உங்கள் வீட்டில் நீங்கள் நகை வைக்கும் இடத்தில், ஒரு சந்தன கட்டையை வைத்து விட்டுங்கள். அதன் பிறகு நீங்களே ஆச்சரிய படுவீர்கள். எத்தனை நாள் அடமானத்திலிருந்து வீடு திரும்பாத நகைகள் கூட உங்கள் வீடு தேடி வந்துவிடும். அதுபோல வந்த நகை மறுபடியும் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கும்.

மேலும் படிக்க...சமையலறையில் அடிக்கடி எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகள் உலா வருவதை தடுக்க..ரொம்பவே உபயோகமாக 5 கிச்சன் டிப்ஸ்.. 

click me!

Recommended Stories