12 வருடங்களுக்கு பிறகு குருவின் வக்கிர நிலை..துன்பத்தை எதிர்கொள்ளப் போகும் ராசிகள், உங்கள் ராசி இதில் இல்லையே

First Published Oct 12, 2022, 3:27 PM IST

Guru Peyarchi 2022 Palangal: குருவின் ராசி மாற்றமானது 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். குருப் பெயர்ச்சியால் , எந்தெந்த ராசிக்காரர்கள் துன்பத்தை எதிர்கொள்ளப் இருக்கிறார்கள் ..? என்பதை தெரிந்துக் கொள்வோம்.

ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அதிலும், நவகிரகங்களில் குரு பகவானுக்கு தனிச்சிறப்பு  உண்டு. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்றொரு ராசியில் பெயர்ச்சி ஆகிறது. இந்த கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் குருவில் நிலை வலுவாக இருக்க வேண்டியது அவசியம்.  குரு பகவான், நவம்பர் 24ம் தேதி தனது நிலையை மாற்றிக் கொள்ளப் போகிறார்.

மேலும் படிக்க ...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு மகிழ்ச்சி.! கும்பம் ராசிக்கு ஏமாற்றம்! உங்கள் ராசிக்கு என்ன பலன்?

12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு தனது சொந்த ராசியான மீனத்தில் இருக்கிறார். தற்போது வக்ர நிலையில் இருக்கும் குரு, நவம்பர் 24 முதல் தனது நிலையை மாற்றிக் கொள்வது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும். இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை பார்ப்போம். குருவின் ராசி மாற்றமானது 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். குருப் பெயர்சியால், எந்தெந்த ராசிக்காரர்கள் துன்பத்தை எதிர்கொள்ளப் இருக்கிறார்கள் ..? என்பதை தெரிந்துக் கொள்வோம்.  

சிம்மம்: 

குருவின் பார்வையில், சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு திடீரென பண வரவு கிடைக்கும். வாழ்வில் கடுமையான எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். வேலைவாய்ப்பு வந்து சேரும். பிரச்சனைகளை இன்னும் சில நாட்கள் நிதானமாக காத்திருக்க வேண்டும். தங்கள் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாள்பட்ட நோயிலிருந்தும் நிவாரணம் பெறுவீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் சற்று பின்னடைவைத் தரும். வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க முடியாமல் போகும். வாழ்வில் சவால்களை சந்திக்க நேரிடும். திருணம் தடைபடும். நீண்ட எதிர்பார்த்த விஷயம் நடக்காமல் போகும்.
 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த சஞ்சாரம் அசுப பலன்களைத் தரும். தொழில்-வியாபாரத்தில் நாஷ்ட்டம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வாழ்வில் புதிய தொடர்புகள் உருவாகும். தொட்ட காரியம் தடைபடும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.

மேலும் படிக்க ...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு மகிழ்ச்சி.! கும்பம் ராசிக்கு ஏமாற்றம்! உங்கள் ராசிக்கு என்ன பலன்?

click me!