தீபாவளி வந்துவிட்டாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என புத்தாடை, வெடிச் சத்தம், இனிப்புகள் என கலகலக்கும். தீபாவளி நாட்களில் நாம் தினமும் குளித்து முடித்து விட்டு புது துணி போட்டு கொண்டால் போதுமா..? நம்முடைய வீடுகளும் அலங்காரத்தில் ஜொலிக்க வேண்டுமா..? அதற்கு தேவையான உதவி குறிப்புகளை தான் நாம் இந்த பதிவில் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம்.
வண்ணமயமான விளக்குகள்:
காகிதத்தால் செய்யப்பட்ட வண்ணமயமான விளக்குகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அவை ஒளிரும் போது அதிக வண்ணங்களைப் பரப்பக்கூடியன. இதை உங்கள் தீபாவளி அலங்கார யோசனையாகப் பயன்படுத்தி, உங்கள் வீட்டை விளக்குகள் மற்றும் மகிழ்ச்சியுடன் ஒளிரச் செய்யுங்கள்.
அலங்காரக் கிண்ணங்கள்:
உங்கள் வீட்டின் வரவேற்ப்பு அறையில் அல்லது பூஜை அறையில் அலங்கார கிண்ணத்தில் தண்ணீரில் நிரப்பி, பூக்கள் மிதக்க விட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்படி, செய்வது உங்கள் வீட்டினை அலங்கரிப்பதுடன், உங்கள் வீட்டிற்கு வருவோரின் கண் திருஷ்ட்டி இருக்காது. இதனால், வீடு நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
ரங்கோலி ஹோல்டர்கள்:
வண்ணமயமான ரங்கோலி கோலம் போடுவது, தீபாவளி நாட்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். உங்கள் ரங்கோலிக்கு இடையில் இந்த டீலைட் ஹோல்டர்களை ஒளிரச் செய்யவும். அவற்றை மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற்றவும் இது உதவுகிறது. இந்த அழகான ஹோல்டர் பல வண்ண மற்றும் மலர் வடிவமைப்புடன் வருகிறது.
மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள்:
வண்ணமயமான மெழுகுவர்த்தியை அலங்கரிக்க, மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகளும் தேவை. பித்தளையால் செய்யப்பட்ட பல்வேறு வகையான மெழுகுவர்த்திகள் குறைந்த விலையில், பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள்.