நடிகை நயன்தார விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இருவருக்கு வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இதையடுத்து, விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவன், பார்வதி, முருகருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'வெல்கம் டு மை உயிர் உலகம் என்று' தெரிவித்திருந்தார்.
ஒரு புறம் மருத்துவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், 10 மாதங்களுக்கு முன்பே அதற்கான ஏற்பாடுகள், மருத்துவ சான்றிதழ்கள் உள்ளிட்ட பல விதிகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள். மேலும், திருமணம் நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் அது சட்டப்படி குற்றமாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த நிலையில், பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், குழந்தைகளின் பெயர்களின் அடிப்படையில் வைத்து பார்க்கும் போது, உயிர் மற்றும் உலகம் தங்கள் பெற்றோரின் (நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்) வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்றார்.