Guru Peyarchi 2022 Palangal: குருவின் நேரடி அருள் காரணமாக, அளவில்லா பண மழையில் நனையும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
ஜோதிடத்தின் பார்வையில், குருவின் பெயர்ச்சி திருமண வாழ்க்கை, பொருளாதாரம், அதிர்ஷ்டம் ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது நிலையை மாற்றிக் கொள்கிறது என்றும், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்கள் மீதும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ராசிகளுக்கு யோகம் பிறக்கும்.
அதன்படி, கடந்த 2022 ஏப்ரலில் மீன ராசியில் பிரவேசித்த குரு பகவான் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மகத்தான பணபலன்களை அள்ளிக் கொடுக்கிறார்.இந்த மூன்று ராசிகள் அடுத்த ஓராண்டு காலத்தில் தொழிலில் வெற்றி, வேலையில் முன்னேற்றம், சொத்து வாங்கும் யோகம் பிறக்கும். அந்த ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
35
Guru Peyarchi 2022
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களின் குருவின் ராசி மாற்றத்தால், வாழ்க்கை பிரகாசிக்கும். ரிஷப ராசிக்காரர்கள் வாழ்வில் பல மடங்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். பணவரவு சாதகமாக இருக்கும். தொழிலில் வெற்றி, வர்த்தகத்தில் வெற்றி கிடைப்பதால், செய்யும் வேலையின் விதமும் மேம்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
45
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்த குருவின் பெயர்ச்சியால், வேலையில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வு, சம்பளத்தில் உயர்வு என வேலையில் உயர்வு கிடைக்கும். வியாபாரிகளின் தொடர்புகள் அதிகரிக்கும். இது உங்கள் அதிர்ஷ்டத்தை மேலும் அதிகரிக்கலாம். பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும்.
கடக ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றத்தால் சுபமான பலன்களை கொண்டு வரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவைக் கொடுக்கும் குரு பகவான், வேலையில் வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், வேலைக்காக அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.
பயணங்களால் நன்மை உண்டாகும். உணவு வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.