பெரும்பாலும் குளிர்காலத்தில் தங்களது நாளை ஒரு கப் இஞ்சி டீயுடன் தொடங்க விரும்புகிறார்கள். இஞ்சி டீ நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக உணர வைப்பது மட்டுமல்லாமல் பருவ கால நோய்கள் வருவதையும் தடுக்க உதவுகிறது. அதாவது, இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, சளி இருமல் போன்ற பொதுவான பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கிறது.
இஞ்சியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள், மாங்கனீஸ் ஃபோலிக் அமிலம் போன்றவை உள்ளன. எனவே குளிர்காலத்தில் இஞ்சி டீ குடிப்பதால் கீழ்க்கண்ட நன்மைகளை பெறலாம். அவை என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.