நம்முடைய வாழ்க்கையில் உறவினர்கள் கை விட்டாலும், ஏன் உடன் பிறந்தவர்களே கைவிட்டாலும் நமது இன்ப துன்பங்களில் பங்கேற்று கடைசி வரை கூட வருவது தான் நண்பர்கள்.ஃபிரெண்ட்ஷிப் டே என்றாலே போதும்... ஸ்கூல்-காலேஜ் ஞாபகங்கள், கையில் கட்டிய கலர் கலர் ஃபிரெண்ட்ஷிப் பேண்டுகள், நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிய தருணங்கள், சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யும் போட்டோக்கள் என எல்லாமே நினைவுக்கு வரும்.
ஆனால், காலம் மாற மாற நட்பைப் பேணும் விதமும் மாறியிருக்கிறது. இன்று நூற்றுக்கணக்கான கான்டாக்ட்ஸ், ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களுக்கு மத்தியில், உண்மையான நண்பர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை. நல்ல பழக்கமானவருக்கும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கஷ்ட நேரத்தில் கூட நிற்கும் உண்மையான நண்பருக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது கடினமாகிவிட்டது.
இந்த ஃபிரெண்ட்ஷிப் டே-யில், உங்கள் நட்பை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க விரும்பினால், கீழே உள்ள 5 கேள்விகளுக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள். இந்த பதில்களை யாரிடமும் சொல்லத் தேவையில்லை; உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருந்தால் போதும்.