பொரித்த உணவுகள்:
எண்ணெயில் பொரித்த உணவுகளில் அதிக ளவு கொழுப்பு மற்றும் எண்ணெய் உள்ளதால், இது குழந்தைகளுக்கு மிகவும் மோசமான தீங்கு விளைக்கும். எனவே குளிர்காலத்தில் சமோசா, வடை போன்ற எண்ணெயில் பொறித்த உணவுகளில் இருந்து உங்கள் குழந்தைகளை விலக்கி வைக்கவும்.
பால் பொருட்கள்:
சீஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். ஏனெனில் அவற்றில் விலங்குகளின் புரதம் அதிகமாக இருப்பதால் அவை குழந்தைகளுக்கு சளி உற்பத்தி அதிகரிக்க செய்யும். இதனால் சில சமயம் குழந்தைகளின் உடல் நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே குளிர்கால முடியும் வரை குழந்தைகளுக்கு பால் பொருட்கள் கொடுப்பதை குறைத்து, அதற்கு பதிலாக குளிர்காலத்திற்கு ஏற்ற உணவை கொடுங்கள்.
அதுமட்டுமின்றி, காளான், கீரை, சோயா சாஸ், பப்பாளி, புளித்த உணவுகள், தயிர், ஊறுகாய் போன்ற உணவுகளை குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுப்பது தவிர்க்க வேண்டும்.