கறிவேப்பிலை டீ தயாரிப்பது எப்படி?
முதலில் ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்துக் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த கறிவேப்பிலையில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, மூடி அரை மணிநேரம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
முக்கியமாக கறிவேப்பிலை டீயின் முழு பலனைப் பெற வேண்டுமானால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.