உங்கள் வீட்டு பெண்களை இந்த விஷயத்தை மட்டும் செய்ய அனுமதிக்க வேண்டாம்..மீறினால் பிரச்சனை தலைவிரித்து ஆடும்...

First Published Sep 17, 2022, 12:58 PM IST

Oru veettil irantu samayal in Tamil: உங்கள் வீட்டு பெண்கள் தவறை நீங்கள் செய்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் குறையும் என்று ஆன்மீக ரீதியாக சொல்லப்படுகிறது. அப்படி என்ன தவறு என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் எல்லாம், கூட்டு குடும்பமாக வாழ்ந்து இல்லறம் சிறக்க செய்தனர். இதனால், பல நல்ல காரியங்கள் சுபமாகவும், மங்களகரமாகவும் நடைபெறும். இன்று இருக்கும் கால சூழ்நிலைக்கு ஏற்ப பல விஷயங்கள் மாறிப்போய் உள்ளனர். தனி குடித்தனம் என்பது பெருகி காணப்படுகிறது.

 மேலும் படிக்க ...இந்த அற்புத சக்தி பற்றி தெரிந்தால் போதும்..இனி எலுமிச்சம் பழத்தோலை தூக்கி குப்பையில் போட மாட்டீர்கள்..

இது போன்ற காலகட்டத்தில் இந்த தவறை வீட்டில் செய்தால் குடும்பத்தில் பிரிவுகளும், சண்டை, சச்சரவுகளும் அதிகரிக்க கூடும். அது மட்டும் அல்லாமல் லட்சுமி கடாட்சம் குறையும் என்று ஆன்மீக ரீதியாக சொல்லப்படுகிறது.  அப்படி என்ன தவறு என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க  இருக்கிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு நபர்கள் வந்து சென்றாலும் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளும், குடும்பமும் மட்டுமே இறுதி வரை நம்முடன் இருக்க முடியும். குடும்பம் என்னும் ஒரு பிடிமானம் இல்லாமல், மற்ற உறவுகளை வழிநடத்தி செல்வது என்பது மனதளவில் கடுமையாக இருக்கும். 

 மேலும் படிக்க ...இந்த அற்புத சக்தி பற்றி தெரிந்தால் போதும்..இனி எலுமிச்சம் பழத்தோலை தூக்கி குப்பையில் போட மாட்டீர்கள்..

ஒரு குடும்பத்தை கட்டி காக்கும் பெண்கள் எப்பொழுதும் வீட்டில் அழக்கூடாது. இவர்கள் அழுகை சத்தம் வீட்டில் கேட்டால் அந்த வீட்டில் செல்வ சேர்க்கை குறையும் என்கிற விதியும் உண்டு. எனவே ஆண்கள் பெண்களை எப்பொழுதும் அழ விடாமல் பத்திரமாக  பார்த்து கொள்ள வேண்டும். 

அதேபோன்று, சில வீடுகளில் ஒரே வீட்டில் இருந்து கொண்டு இரண்டு சமையல் செய்கிறார்கள். அதாவது, கூட்டு குடும்பமாக இருந்து திடீரென சண்டை போட்டுக் கொண்டு சிலர் தனி தனியாக சமைக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி ஒன்றுபட்ட குடும்பத்தில் இரண்டு அடுப்பு எறிந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் குறைகிறது. இதனால் செல்வ வளம் தடைபடுகிறது. வருமானம் ஈட்டுவதில் பிரச்சனைகள் உண்டாகிறது.

இதுபோல ஒரே வீட்டில் தனித்தனி சமையல் செய்வது என்பது குடும்பத்தில் லட்சுமி கடாட்சத்தை குறைக்கும் செயலாகும். மேலும் முதல் முதலில் அடுப்பை காலையில்  ஆண்கள் பற்ற வைப்பதை விட, பெண்கள் அடுப்பை பற்ற வைத்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். இதனால் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் ஏற்படும்.

 மேலும் படிக்க ...இந்த அற்புத சக்தி பற்றி தெரிந்தால் போதும்..இனி எலுமிச்சம் பழத்தோலை தூக்கி குப்பையில் போட மாட்டீர்கள்..

click me!