இது போன்ற காலகட்டத்தில் இந்த தவறை வீட்டில் செய்தால் குடும்பத்தில் பிரிவுகளும், சண்டை, சச்சரவுகளும் அதிகரிக்க கூடும். அது மட்டும் அல்லாமல் லட்சுமி கடாட்சம் குறையும் என்று ஆன்மீக ரீதியாக சொல்லப்படுகிறது. அப்படி என்ன தவறு என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.
ஒரு குடும்பத்தை கட்டி காக்கும் பெண்கள் எப்பொழுதும் வீட்டில் அழக்கூடாது. இவர்கள் அழுகை சத்தம் வீட்டில் கேட்டால் அந்த வீட்டில் செல்வ சேர்க்கை குறையும் என்கிற விதியும் உண்டு. எனவே ஆண்கள் பெண்களை எப்பொழுதும் அழ விடாமல் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்.
அதேபோன்று, சில வீடுகளில் ஒரே வீட்டில் இருந்து கொண்டு இரண்டு சமையல் செய்கிறார்கள். அதாவது, கூட்டு குடும்பமாக இருந்து திடீரென சண்டை போட்டுக் கொண்டு சிலர் தனி தனியாக சமைக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி ஒன்றுபட்ட குடும்பத்தில் இரண்டு அடுப்பு எறிந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் குறைகிறது. இதனால் செல்வ வளம் தடைபடுகிறது. வருமானம் ஈட்டுவதில் பிரச்சனைகள் உண்டாகிறது.