ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..இல்லையென்றால் சீக்கிரம் முடி கொட்டி விடும்!

First Published Sep 25, 2022, 8:01 AM IST

Hair falls tips in tamil: நாம் தினமும் ஷாம்பு போடுவதால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கான சில வழிமுறைகளை தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இன்றைய பிஸியான வாழ்கை முறையில் ஆண், பெண் ஆகிய இருவரும் வேலைக்கு சென்று வருகிறோம். வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்டுவதால், தலையில் தூசி, அழுக்கு போன்றவை எளிதில் தங்கி விடுகிறது. இதனால், நாம் தினமும் தலைக்கு குளிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

 மேலும் படிக்க...வெறும் 1 ரூபாய் கற்பூரம் இருந்தால் போதும்..உங்களின் காசும் மிச்சம், கரப்பான், வண்டு பூச்சிகளை முற்றிலும் கொல்ல

அப்படி, நாம் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அவற்றில் எவ்வளவு கெமிக்கல் கலந்து இருக்கும் என்பதை பற்றி யாரும் சிந்திப்பதே கிடையாது. அதை தினமும் பயன்படுத்தும் போது நம் தலை முடி உதிரத்தானே செய்யும். இப்படி நாம் தொடர்ந்து ஷாம்பு போடுவதால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கான சில வழிமுறைகளை தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

முதலில் இதற்கு நாம் 1 கப் தண்ணீரில் ஷாம்பு போட்டு கலக்கி கொள்ள வேண்டும். பிறகு, சிறிது தண்ணீர் ஊற்றி முடியை அலசிய பிறகு ஷாம்பு போட்டு குளித்தால் அழுக்கு சுத்தமாக போய் விடும். முடியும் அதிகமாக உதிராது. இதனை தவிர்த்து நாம் அப்படியே ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் உள்ள எண்ணெய் பிசுக்கு  மட்டுமே போகும் ஆனால் அழுக்கு தலையிலே தங்கிவிடும். 

 மேலும் படிக்க...வெறும் 1 ரூபாய் கற்பூரம் இருந்தால் போதும்..உங்களின் காசும் மிச்சம், கரப்பான், வண்டு பூச்சிகளை முற்றிலும் கொல்ல

அதே போல் தலை குளிக்கும் முன்பு தலை முடியை நன்றாக சிக்கெடுத்த பிறகு தான் தலை குளிக்க வேண்டும். நாம் அப்படியே தலைக்கு குளிப்பதால் சிக்கு இருக்கும் இடத்தில் உள்ள முடிகள் கொத்தாக வந்து விடும்.

அதேபோல், ஷாம்பு போட்டு தேய்க்கும் முன் சிறிதளவு சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பு கலந்த பிறகு உங்கள் தலையில் தேய்த்து கொள்ளுங்கள். இது போல செய்வதால் உங்கள் முடி அதிகமாக உதிராமல் இருக்கும்.

 மேலும் படிக்க...வெறும் 1 ரூபாய் கற்பூரம் இருந்தால் போதும்..உங்களின் காசும் மிச்சம், கரப்பான், வண்டு பூச்சிகளை முற்றிலும் கொல்ல

நீங்கள் தலைக்கு குளிக்கும் போது அவசர அவசரமாக தேய்த்து வேகமாக தண்ணீர் ஊற்றும் போது நீங்களே உங்கள் முடி உதிர காரணமாகி விடுவீர்கள். மெதுவாக ஷாம்பு போட்டு தேய்த்த பிறகு மெதுவாக தண்ணீர் விட்டு தான் முடியை அலச வேண்டும்.

 மேலும் படிக்க...வெறும் 1 ரூபாய் கற்பூரம் இருந்தால் போதும்..உங்களின் காசும் மிச்சம், கரப்பான், வண்டு பூச்சிகளை முற்றிலும் கொல்ல

மேலும், தினமும் ஷாம்பு போட்டு குளிக்கும் போது நம் தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை நாமே எடுத்து விடுகிறோம். எனவே, வாரத்துக்கு இரண்டு நாள் ஷாம்பு போட்டு குளிப்பது நல்லது.  மற்ற நாட்களில் கண்டிஷனர் அல்லது சீயக்காய் போட்டு குளிப்பது நல்லது. இந்த குறிப்புகளை தெரிந்து கொண்டு உங்களின் முடி உதிர்வை கட்டுப்படுத்துங்கள்.

click me!