குளிர் அதிகமாக உணர்ந்தால், வெப்பநிலையைச் சற்று உயர்த்தலாமே தவிர, ஏசியை அணைக்க வேண்டாம். இரவு நேரங்களில் 'ஸ்லீப் மோடு' பயன்படுத்துவது மிகச் சிறந்த பழக்கம். அறையின் கதவு, ஜன்னல்களை மூடி வைப்பதும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஏசி ஃபில்டரை சுத்தம் செய்வதும் அதன் செயல்திறனைப் பெரிதும் மேம்படுத்தும்.
வருடத்திற்கு ஒருமுறை நிபுணர் மூலம் சர்வீஸ் செய்வது, பெரிய பழுதுகள் வராமல் தடுக்கும். மின்தடைக்குப் பிறகு, உடனடியாக ஏசியை ஆன் செய்யாமல், 3-5 நிமிடங்கள் காத்திருப்பது கம்ப்ரசரின் ஆயுளைக் கூட்டும். சுருக்கமாகச் சொன்னால், ஏசியை அடிக்கடி ஆன், ஆஃப் செய்வது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சரியான வெப்பநிலையை செட் செய்து, சீராக இயங்க விடுவதே மின்சாரத்தை சேமிக்கவும், ஏசியை நீண்ட காலம் பயன்படுத்தவும் சிறந்த வழியாகும்.