உங்களை பாடாய் படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு தரும் ஓமம்.., கஷ்டங்கள் விலகும், தெய்வம் வீட்டில் நுழையும்..

First Published Sep 16, 2022, 10:04 AM IST

Vastu Tips in Tamil: உங்கள் வீட்டில் எப்போதும், பண பிரச்சனை, குடும்பத்தில் வறுமை, சண்டை, சச்சரவுகளும் போன்றவை பாடாய் படுத்தது என்றால், ஓமம் பயன்படுத்துவது உங்களுக்கு ஒரு நல்ல தீர்வாகும். 

வீட்டில் பிடித்த பீடை ஒழிய, கெட்ட சக்திகளை அடியோடு விரட்டி அடிக்க, ஓமம் பயன்படுத்தி பாருங்கள். ஏனெனில், கெட்ட சக்திகளுக்கு பிடிக்காத, நல்ல சக்திகளுக்கு ரொம்பவும் பிடித்த வாசம் தான் இந்த ஓமம் வாசம். இதில் இருந்து வெளிவரக்கூடிய வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் தங்கவே தங்காது. 

மேலும் படிக்க...இந்த ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான், பல்லி,எறும்பை விரட்டி, அழுக்கை போக்கி நறுமணம் வீசும்

எனவே, ஓமத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்தால் வீட்டில் இனிமேல் சண்டை சச்சரவுகள் ஏற்படாது. வீட்டில் தங்கி இருக்கும் கெட்ட சக்தி வெளியே ஓடிவிடும். நிலை வாசலில் காத்து நிற்கும் தெய்வங்கள் வீட்டிற்குள் வரும். அப்படியாக, இந்த ஓமத்தை வைத்து நாம் செய்யக்கூடிய சுலபமான பரிகாரம் பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்ள போகிறோம். 

இதற்கு முதலில் மளிகை கடைகளில் ஓமம் வாங்கி கொள்ளுங்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும்மல்ல, ஆன்மீக ரீதியாக இதன் சக்தி பல்வேறு அற்புத பலன்களை கொண்டுள்ளது. இந்த பரிகாரத்தை செய்ய ஓமத்தோடு சேர்த்து நான்கு கட்டி கற்பூரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...இந்த ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான், பல்லி,எறும்பை விரட்டி, அழுக்கை போக்கி நறுமணம் வீசும்

camphor

ஒரு சிறிய டப்பாவில் கற்பூரத்தையும் ஓமத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். கற்பூரத்தை உடைத்து தூள் செய்து, அந்த கற்பூர துகள்களில், இந்த ஓமத்தை கலந்து வைத்தாலும் சரிதான். ஒரு சிறிய தட்டில் ஓமம் கலந்த கற்பூரத்தை ஏற்றி வைத்தால் ஓமமும் கற்பூரமும் சேர்ந்து எறிய தொடங்கும். இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்கலாம். இந்த புகைக்கு வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறிவிடும்.


இந்த வாசம் நிச்சயமாக உங்களுடைய வீட்டில் நிலைத்து இருக்கும். இந்த வாசத்திற்கு உங்களுடைய வீட்டை தேடி தெய்வ சக்தி வரும். இதோடு மட்டுமல்லாமல் இந்த கலவையை ஒரு சிறிய மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டி நிலை வாசல் படியில் மாட்டி வைத்தால் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் ஏற்படும். தெய்வ நம்பிக்கை  உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறலாம். 

பின் குறிப்பு: வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் ஓமத்தை பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. எச்சில் செய்யாத புதிய ஓமமாக கடையில் இருந்து வாங்கி பரிகாரத்திற்கு தனியாக பூஜையறையில் வைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், மெழுகு கற்பூரத்தை இதற்கு பயன்படுத்தக் கூடாது. பச்சை கற்பூரத்தையும் பயன்படுத்தக் கூடாது.

மேலும் படிக்க...இந்த ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான், பல்லி,எறும்பை விரட்டி, அழுக்கை போக்கி நறுமணம் வீசும்

click me!