திருபாய் அம்பானி நினைவாக இந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றியுள்ளார் அம்பானி. உலகின் பணக்காரர்களின் ஒருவராக இருந்த திருபாய் அம்பானி, இந்த வீட்டில் தான் பிறந்தாராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 2 மாடிகள் கொண்ட இந்த மாளிகை நினைவிடமாக மாற்றப்பட்டது. இந்த நினைவிடத்தில் பித்தளை, செம்பு பாத்திரங்கள், மர சாமான்கள், அம்பானி குடும்பத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பிற பொருட்களும் உள்ளன.