மடகாஸ்கரில், இந்த வழக்கத்தை ஃபமதிஹானா (எலும்புக்கூட்டை திருப்புதல்) என சொல்கிறார்கள். இறந்தவர்களின் உடல் எவ்வளவு சீக்கிரம் எலும்பு கூடாக மாறுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் விடுதலை அடைகிறார்கள் என மக்களிடையே நம்பிக்கை காணப்படுகிறது. இப்படியாக அவர்கள் புதிய வாழ்வில் நுழைவார்கள் எனவும் இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை தான் அவர்களுக்கு ஒருவர் இறக்கும்போது துக்கப்பட தேவையில்லை என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது போலும்.