மறுநாள் தோசை கல்லை எடுத்து வெறும் நீரில் அலசிவிடுங்கள். ஆர்வத்தில் சோப்பு போட்டு விடாதீர்கள்; வெறும் தண்ணீர் போதும். அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து காய வையுங்கள். பின்னர் கொஞ்சம் புளியை (விதை இல்லாமல்) காட்டன் துணியில் வைத்து எண்ணெய்யில் நனைத்து தோசை கல்லில் வைத்து தேய்க்கவும். முதல் தோசையை தடிமனாக கல் தோசை போல சுட்டு எடுங்கள். தோசை கல்லில் ஒட்டாமல் நன்றாக வரும். இதன் பிறகு அடுத்தடுத்த தோசைகளை மெல்லிசாக வார்த்து எடுங்கள். கனமில்லாத மெல்லிய மொறுமொறு தோசைகள் வீட்டிலே செய்யலாம்.
தோசை சுடும் போது எண்ணெய் தடவ துணியை உபயோகம் செய்யாமல் பாதி வெட்டிய வெங்காயம் கத்தரிக்காய் ஆகியவற்றை பயன்படுத்தலாம் இது தோசை ஒட்டாமல் வருவதற்கு உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: பெண்கள் காலில் குங்குமத்தை பூசி கொண்டால், வீட்டில் பணம் பெருகும் என்கிறார்கள். ஜோதிடம் இப்படியா சொல்கிறது?