Chanakya Niti: இந்த 4 விஷயங்களுக்குப் பிறகு கண்டிப்பா குளிக்கணும்! சாணக்கியர் சொல்லும் அட்வைஸ்

Published : Aug 28, 2026, 08:10 AM IST

Chanakya Niti: சாணக்கியருடன் தொடர்புபடுத்தப்படும் பழமையான அறிவுரைகளில் சில செயல்களுக்குப் பிறகு குளிப்பது குறித்து கூறப்படுகிறது. அந்த 4 சூழல்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
அந்த நான்கு வேலைகள் எவை?
ஆச்சார்ய சாணக்கியர் தனது 'சாணக்கிய நீதி'யில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் வழிகாட்டியுள்ளார். நல்ல வாழ்க்கை முறை, சமூகத்தில் பழகுவது, குடும்ப உறவுகள் என பலவற்றோடு தனிப்பட்ட சுத்தத்திற்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். தினமும் குளிப்பது வழக்கம்தான் என்றாலும், சில குறிப்பிட்ட வேலைகளுக்குப் பிறகு குளிப்பது அவசியம் என்கிறார் சாணக்கியர். அந்த நான்கு வேலைகள் என்ன, அதன் பின்னணி என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
25
1. எண்ணெய் மசாஜ் அல்லது தேய்த்துக் குளித்த பிறகு
சாணக்கிய நீதியின்படி, உடம்பில் எண்ணெய் தேய்த்த பிறகு அல்லது மசாஜ் செய்த பிறகு குளிப்பது கட்டாயம். மசாஜ் செய்யும்போது உடல் முழுவதும் பிசுபிசுப்பாக இருக்கும். இந்த எண்ணெய் சருமத் துளைகளை அடைத்து, வெளியில் உள்ள தூசியை உடலில் ஒட்டச் செய்யும். அதனால், மசாஜ் செய்த சிறிது நேரத்திலேயே சோப்பு போட்டு குளித்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும்.
35
2. மயானத்திலிருந்து திரும்பிய உடனேயே
இந்து மத சம்பிரதாயப்படி, இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு மயானத்திலிருந்து திரும்பியதும் குளிப்பது கட்டாயம். சாணக்கியரும் இந்த வழக்கத்தை ஆதரிக்கிறார். சடலம் எரியும் இடத்தில் புகை மற்றும் பல நுண்ணிய பாக்டீரியாக்கள் காற்றில் கலந்திருக்கும். அவை நமது உடை மற்றும் உடலில் ஒட்டிக்கொள்ளும். குளிக்காமல் வீட்டு வேலைகளைச் செய்வது அல்லது தூங்குவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எனவே, வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு குளிப்பது அவசியம்.
45
3. தம்பதியினர் தெரிந்து கொள்ள வேண்டியது

சாணக்கிய நீதியின்படி, தம்பதியினர் தனிமைக்கு பிறகு குளிப்பது மிகவும் முக்கியம். தனிமைக்குப் பிறகு குளிக்கும் வரை உடல் புனிதமடையாது என்று நம்பப்படுகிறது. குளிக்காமல் எந்த மத காரியங்களையோ அல்லது சமையல் போன்ற வேலைகளையோ செய்யக்கூடாது. இது உடல்ரீதியாகவும், மதரீதியாகவும் மிக முக்கியமான விதியாகும்.

55
4. முடி அல்லது தாடி வெட்டிய பிறகு (ஷேவிங்)
ஆண்கள் முடி வெட்டிய பிறகோ அல்லது ஷேவிங் செய்த பிறகோ கட்டாயம் குளிக்க வேண்டும். முடி வெட்டும்போது, மிகச் சிறிய முடிகள் உடலில் ஒட்டிக்கொள்ளும். இவற்றை துணியால் துடைத்தால் மட்டும் போகாது. குளிக்காமல் உணவு சாப்பிட்டால், அந்த முடிகள் உணவின் மூலம் வயிற்றுக்குள் செல்லும் அபாயம் உள்ளது. எனவே, முடி வெட்டிய பிறகு குளிப்பதுதான் பாதுகாப்பானது. ஆச்சார்ய சாணக்கியர் சொன்ன இந்த நான்கு விஷயங்களும் வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, இவற்றின் பின்னால் அறிவியல் மற்றும் ஆரோக்கிய காரணங்களும் இருக்கின்றன.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories