முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதி பொருட்கள் கற்றாழையில் அதிகமாக உள்ளன. கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதை ஷாம்பு கொண்டு கழுவவும். கற்றாழை ஜெல் பொதுவாக முடியில் பயன்படுத்த பாதுகாப்பானது என்றாலும், சிலருக்கு குளிர்ச்சி காரணமாக ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.