கோடை வெயில் முடியப்போகிறது. அக்னி நட்சத்திரத்திற்கு டாட்டா சொல்லிவிட்டு ஜில்லென்று அருவியில் நனைய ஆசையா? குற்றாலம் ஒகேனக்கல் போர் அடித்துவிட்டதா? அப்படியென்றால் இந்த சம்மர் முடிவதற்குள் தமிழகத்தில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகள் இதோ
தேனி மாவட்டத்தில் இருக்கும் மேகமலைக்கு போனா 'ஆனை விழுந்தான்' நீர்வீழ்ச்சியை மிஸ் பண்ணாதீங்க. அடர்ந்த தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே, கண்ணை பறிக்கும் பசுமையில் கொட்டும் இந்த அருவி, சம்மர் ஹீட்டை மொத்தமாய் மறக்கடிக்கும்.
25
கும்பக்கரை நீர்வீழ்ச்சி
கொடைக்கானல் போகும் வழியில பெரியகுளம் பக்கத்தில் இருக்கு இந்த ரகசிய அழகு. பாறைகளின் இடுக்குகளில் மூலிகை வாசனையோடு வரும் தண்ணீரில் குளித்தால், உடம்பில் இருக்கும் அத்தனை அசதியும் பறந்து போயிடும். குடும்பத்தோடு போக செம ஸ்பாட்!
35
சிறுவாணி நீர்வீழ்ச்சி
கோவை மக்கள் குடுத்துவச்சவங்க! காடுகளுக்கு நடுவே 1 கி.மீ டிரெக்கிங் போய் இந்த அருவியை அடையணும். இதோட தண்ணீரை குடிச்சுப் பார்த்தா, தேனை விட இனிக்கும். வெயிலுக்கு செம சாய்ஸ், ஆனா ஞாயிற்றுக்கிழமை லீவு பாஸ்!
குற்றாலத்துல கூட்டம் அலைமோதுதா? அப்போ நேரா குத்தம்பஞ்சான் அருவிக்கு வண்டிய விடுங்க. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், இயற்கை சூழலில் அமைதியாக கொட்டும் இந்த அருவி, இன்னும் பலருக்கு தெரியாத ஒரு பட்ஜெட் சுற்றுலா தலம்!
55
ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி
நாமக்கல் கொல்லிமலையில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சி அட்வென்ச்சர் பிரியர்களுக்கானது. 300 அடி உயரத்தில் இருந்து விழும் தண்ணீரை பார்க்க 1000 படிக்கட்டுகள் இறங்கிப் போகணும். சம்மர் எண்ட்-ல இங்க போனா மனசும் உடம்பும் செம்ம ஃபிரெஷ் ஆகிடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.