மறந்தும் கண்ணாடியை வீட்டில் இந்த இடங்களில் வைக்காதீர்கள். பிறகு வீண் பிரச்னை தான் எழும்.

First Published Mar 17, 2023, 4:08 PM IST

வீட்டில் வைக்கப்படும் கண்ணாடிகளால் நீங்கள் பல்வேறு பிரச்சனைகளை மறைமுகமாக சந்தித்து கொண்டிருப்பீர்கள். ஆகவே கண்ணாடிகளை வீட்டின் எந்தெந்த இடத்தில் வைக்கலாம் ? எங்கே வைக்க கூடாது ? அப்படி வைத்தால் என்ன ஏற்படும். போன்றவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

நம்மை நமக்கே பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடி நமது ஒவ்வொருவருடைய வீட்டிலும் நிச்சயமாக இருக்கும்.பொதுவாக நம்மில் பலரும் ஹாலில், பெட் ரூமில், வாஷ் பேசினுக்கு மேல் என்று பல இடங்களில் கண்ணாடியை மாட்டி வைத்திருப்போம்.

நம்மில் பலரும் கஷ்டப்பட்டு முயற்சி செய்து, பல்வேறு விதங்களில் உழைத்தும் போதிய அளவில் பயன் இல்லாமல், பலன் அளிக்காமல் இருக்கும். இதற்கும் வீட்டில் வைக்கப்படும் கண்ணாடிகளுக்கும் ஒரு முக்கிய தொடர்பு உள்ளது என்பது தெரியுமா?

இப்படி வீட்டில் வைக்கப்படும் கண்ணாடிகளால் நீங்கள் பல்வேறு பிரச்சனைகளை மறைமுகமாக சந்தித்து கொண்டிருப்பீர்கள். ஆகவே கண்ணாடிகளை வீட்டின் எந்தெந்த இடத்தில் வைக்கலாம் ? எங்கே வைக்க கூடாது ? அப்படி வைத்தால் என்ன ஏற்படும். போன்றவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

மூட்டுவலியை மட்டுமில்ல முன்ஜென்ம வினைகளையும் போக்கக்கூடிய சக்தி இந்த ''பிரண்டைக்கு'' உண்டு என்று தெரியுமா!

படுக்கை அறையில்:

நம்மில் ஒரு சிலர் பெட் ரூமில் கட்டிலுக்கு நேரதிராக கண்ணாடி வைத்திருப்பார்கள். இந்த தவறை ஒரு மறந்தும் செய்து விடக் கூடாது. இப்படி வைத்தால் கண்ணாடியை இப்படி வைத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பதை காணலாம்.

காலை எழுந்தவுடன் நாம் கண் விழிக்கும்போது படுக்கை அறையிலுள்ள கண்ணாடியை பார்த்து எழுவதால் வாழ்வில் எப்போதும் நாம் செய்யும் செயல்களில் தோல்விகளை மட்டுமே சந்திக்க செய்யும்.

ஒரு வேளை இப்படி உங்கள் வீட்டின் படுக்கை அறையில் கண்ணாடி இருப்பின் இரவு தூங்கும் முன் கண்ணாடிக்கு ஒரு திரை போட்டுக் கொள்ளலாம். காலை எழுந்த பிறகு குளித்த பிறகு திரையை எடுத்து விடலாம்.

குளியல் அறையில் :

அடுத்தபடியாக நம்மில் அதிகமானோர் வீடுகளில் பாத் ரூமில் கண்ணாடி வைத்திருப்பார்கள். பொதுவாக பாத் ரூமில் கண்ணாடி வைப்பதை கூடுமான வரை தவிர்த்தல் நல்லது. அப்படி கண்டிப்பாக தேவைப்படும் எனில் , குளிக்கும் போது குழிமுக நபர்களின் பிம்பம் கண்ணாடியில் தெரியாத வாறு இருத்தல் வேண்டும். மேலும் வடக்கு திசையிலிருக்கும் சுவற்றில் அல்லது கிழக்கு திசையிலிருக்கும் சுவற்றில் தான் வைக்க வேண்டும்.

மாறாக தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்கும் சுவர்களில் கண்ணாடி இருப்பின் வீட்டில் உள்ள நபர்களுக்கு நோய்கள் வரக்கூடும்.தவிர மனதில் பயம் மற்றும் குழப்பம் ஏற்படும் .

நிலை வாசலில்:

ஒரு சிலர் வீட்டு நிலை வாசலில் கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு இது அதிர்ஷ்டத்தை தரும் ஆனால் ஒரு சிலருக்கு இப்படி கண்ணாடி வைப்பதால் பிரச்சினைகள் எழக்கூடும்.

நிலைவாசலில் கண்ணாடி வைப்பதால் ஒரு சிலருக்கு பணப்பிரச்சனையும் , ஒரு சிலருக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள்எழும். இம்மாதிரியான பிரசச்னைகள் எழுந்தால் நிலை வாசலின் மேல் இருக்கும் கண்ணாடியை எடுத்து வீட்டிற்குள் ஒரு சுவற்றில் மாட்டி விடுங்கள்.

அதே நேரத்தில் வீட்டிற்கு உள்ளே வருபவர்கள், வீட்டிற்குள் நுழைந்தவுடன் கண்ணாடியை பார்க்கும் விதமாக இருத்தல் வேண்டும். நிலைவாசல் என்பது அஷ்டலக்ஷ்மிகள் மற்றும் மஹாலக்ஷ்மியும் வாழும் இடமாக இருப்பதால் அங்கே கண்ணாடியை வைத்தால் வீட்டின் உள்ளே வருபவர்களுடைய எண்ணங்களை அக்கண்ணாடி தன்னகத்தே அவைகளை உள்வாங்கும்.

மேலும் கண்ணாடி அங்கே இருப்பதால் அவ்விடத்தின் இறை சக்தியை குறைந்து போகும் என்பதற்காகவே நிலை வாசலின் மேல் கண்ணாடியை வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள்

வாஸ் பேசின்:

கை கழுவ, முகம் கழுவ என்று வாஸ் பேசின் மேல் கண்ணாடியை வைக்கலாம். மேலும் வீட்டின் வேறு ஏதாவது ஒரு இடத்தில அதாவது ஹாலில் அல்லது வேறு இடத்தில் கண்ணாடியை வைத்து இருந்தால் அதனை கிழக்கு மற்றும் வடக்கு திசையில் வைக்கக்கூடாது.

எங்கே கண்ணாடியை வைத்தல் சிறந்தது:

வீட்டினுள்ள மேற்கு மற்றும் தெற்கு திசையில் உள்ள சுவர்களில் கண்ணாடியை வைக்க சிறந்த இடமாக இருக்கிறது.

உங்களுடைய வீட்டில் தொடர்ந்து கஷ்டமோ பிரச்சனையோ இருந்தால் உங்கள் வீட்டு கண்ணாடியை தவறான இடத்தில் இருப்பின் அதனை எடுத்து சரியான இடத்தில் வைத்து விட்டால் உங்களது வாழ்வில் நல்லதொரு மாற்றம் விரைவில் ஏற்படும். சாஸ்திரங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதை சரி செய்து வாழ்வில் முன்னேறுங்கள்.

click me!