
பொதுவாக மாதவிடாய் நாட்களில் பெண்கள் வயிற்று வலி, முதுகு வலி, இடுப்பு வலி, மன அழுத்தம், சோர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அந்தவகையில், மாதவிடாய் காலத்தில் ஒருசில பெண்களுக்கு வலி இருக்கவே இருக்காது. ஆனால், சில பெண்களுக்கோ தாங்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். சொல்லபோனால் அதிக வயிறு வலி மற்றும் இரத்த போக்கு, பலவீனம் போன்ற காரணங்கள் படுக்கையை விட்டு எழுதிருக்க கூட முடியாத அளவிற்கு இருப்பார்கள்.
இப்படிப்பட்ட நேரத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தினமும் செய்யும் நடை பயிற்சி செய்யலாமா? இந்த நாள் அவர்களுக்கு நன்மைகள் அல்லது பக்க விளைவுகள் ஏற்படுமா? என்ற கேள்விக்கான பதில் குறித்து இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?:
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்தால் மேம்பட்ட சுழற்சி, மனநிலை மேம்பாடு, மன அழுத்தத்தை குறைக்கும், எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு உள்ளிட்ட பல நன்மைகளை வாரி வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனாலும் உங்களது உடல் எப்படிப்பட்டது என்று உங்களுக்கு தான் தெரியும். எனவே நடை பயிற்சி செய்யும் போது கவனமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் மகப்பேறு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, பெண்கள் மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி தவிர சில உடற்பயிற்சி கூட செய்யலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வதன் நன்மைகள்:
மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம்..
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்தால் உடலில் ஒட்டுமொத்த ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். ரத்த ஓட்டம் மேம்படுவதன் மூலம் மாதவிடாய் பிடிப்பை கட்டுப்படுத்தப்படும். இதுதவிர, மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்தால் ரத்தப்போக்கை திறம்பட நீக்குகிறது மற்றும் உடலில் வலி மற்றுன் வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது.
மனநிலை மேம்படும்..
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகள் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இயற்கையாகவே மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. பொதுவாக மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் மாற்றங்கள் மனநிலை மாற்றங்கள் அல்லது எரிச்சலை ஏற்படுத்தும். எனவே இதை தவிர்க்க மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யவது நல்லது.
மன அழுத்தத்தை குறைக்கும்..
மாதவிடாய் நாட்களில் பூங்கா வயல்வெளி, இயற்கையான இடங்களில் அல்லது வீட்டிற்குள்ளேயே நடைபயிற்சி செய்யலாம். இது மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது. ஏனெனில், மன அழுத்தம் மாதவிடாய் நாட்களில் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: கர்ப்பக்காலத்தில் வாக்கிங் போனா சுகப்பிரசவம் ஆகுமா? எவ்வளவு நேரம் போகனும் தெரியுமா?
எடை மேலாண்மை..
சீரான உடற்பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக வழக்கமான நடை பயிற்சி எடை மேலாண்மைக்கு பெரிது உதவும். ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாம். இதனால் சில மாதவிடாய் அசெளகரியங்களைத் தணிக்க பெரிதும் உதவுகிறது.
ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும்..
மாதவிடாய் நாட்களில் நடைப்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், தசைகளை வலுப்படுத்தும், உடலின் ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கும் உள்ளிட்ட ஒட்டுமொத்த உடல் நலத்தையும் மேம்படுத்தும்.
இதையும் படிங்க: வெறும் வாக்கிங் பத்தாது.. நடைபயிற்சி கூட இந்த '5' விஷயங்களை பண்ணா தான் பலன்கள்!!
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வதன் தீமைகள்:
இரத்த போக்கு அதிகரிக்கும்..
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சி செய்யும்போது சில பெண்களுக்கு இரத்த போக்கு அதிகரிக்கும். இது தற்காலிக அதிகரித்து ஆகும்.. மேலும் இது ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்படுத்தாது.
தசை சோர்வு..
மாதவிடாய் நாட்களில் தீவிரமான அல்லது நீடித்த நடை பயிற்சி தசைசோர்வை ஏற்படுத்தும். குறிப்பாக கால்களில் அதிகப்படியான உடல் உழைப்பு சோர்வு, பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
சுகாதாரக் கவலைகள்..
மாதவிடாய் நாட்களில் பெண்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது உடல் சுகாதாரத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். மேலும், அசெளகரிய எரிச்சலை தடுக்க சானிட்டரியை
தவறாமல் மாற்றவும்.
குறிப்பு : பொதுவாக மாதவிடாய் நாட்களில் போன்ற அறிகுறிகள் இரண்டும் மூன்று நாட்களில் மட்டுமே இருக்கும். நடை பயிற்சி போன்ற உடற்பயிற்சி இவற்றை குறைக்க உதவும்.