சாதாரண சூழ்நிலைகளில், அமோனியா உள்ள வீட்டு உபயோகப் பொருட்களைச் சரியாகப் பயன்படுத்தும்போது எந்தப் பெரிய ஆபத்தும் ஏற்படுவதில்லை.
ஆனால், இந்தச் சுத்திகரிப்புப் பொருட்களைத் தவறான முறையில் கையாளும்போதுதான் விபத்துகள் ஏற்படுகின்றன. மக்கள் செய்யும் மிகப்பொரிய தவறு, பல்வேறு கெமிக்கல்களை ஒன்றாகக் கலந்து பயன்படுத்துவதுதான்!
இரண்டு கிளீனர்களை ஒன்றாகக் கலந்தால் இன்னும் சூப்பராக, சுத்தமாக மாறும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் இது மிக ஆபத்தானது!
அமோனியா கலந்த கிளீனர்களுடன் பிளீச்சிங் பவுடரை சேர்க்கும்போது, காற்றில் நச்சு வாயுக்கள் (Toxic gases) வெளியாகும். இந்த வாயுக்களை சுவாசிப்பதால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படலாம்:
- கண்கள் எரிச்சல்
- மூக்கு மற்றும் தொண்டையில் கடுமையான எரிச்சல் உணர்வு
- இருமல் மற்றும் மூச்சுத் திணறல்
- நெஞ்சு வலி
- காற்றோட்டம் இல்லாத அறைகளில் இது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்!
உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்களால் எச்சரிக்கப்படும் மிக முக்கியமான கெமிக்கல் பாதுகாப்பு விதி இதுவாகும்.