
ஆரஞ்சு பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆரஞ்சு பழத்தை போலவே ஆரஞ்சு பழத்தோலின் பொடியும் ரொம்பவே நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி -யானது பழத்தை விடவே அதிகமாக உள்ளது.
குறிப்பாக ஆரஞ்சு பழ தோல் பொடியானது சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்புக்கு ரொம்பவே நல்லது. எனவே அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரஞ்சு பழ தோல் பொடியின் நன்மைகள்:
முடிக்கு..
1. இதில் இருக்கும் வைட்டமின் சி பொடுகை எதிர்த்து போராடுகிறது
2. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
3. கூந்தலை மிருதுவாகவும் பளபளப்பாகவும், நீளமாகவும் மாற்றுகிறது
4. முக்கியமாக முன்கூட்டியே நரைப்பத்தை தாமதப்படுத்துகிறது
இதையும் படிங்க: தோல் பராமரிப்பில் ஆரஞ்சு பழம் யூஸ் பண்ணுங்க.. ஒளிரும் சருமத்தை பெற்றுக்கோங்க..!!
சருமத்திற்கு..
1. சருமத்தை பிரகாசமாகவும், சீரற்ற நிறமியை சமன் செய்யவும் உதவுகிறது
2. முகத்தில் இருக்கும் துளைகளை அடைக்கவும், முகப்பருவை குறைக்கவும் உதவுகிறது
3. கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை குறைக்கிறது
4. தோல் வயதானதை தாமதப்படுத்துகிறது. சுருக்கங்கள், தொய்வு தோல் மற்றும் நேர்த்தியான கோடுகளை தடுக்கிறது
உடலுக்கு..
ஆரஞ்சு தோல் பொடி சாப்பிட்டு வந்தால் இரைப்பை புண்களை ஆற்றும், பசியை தூண்டும், இரத்த அழுத்தத்தை குறைக்கும், மூளை சிதைவு கோளாறுகளை தாமதப்படுத்தும் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும்.
இதையும் படிங்க: கரப்பான் பூச்சிகள் உங்க வீட்டிலிருந்து தலைத் தெறிக்க ஓட.. ஆரஞ்சு பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்க!
ஆரஞ்சு தோல் பொடியின் பக்க விளைவுகள்:
- ஆரஞ்சு தோல் பொடி சருமத்திற்கு அதிகமாக பயன்படுத்தினால் தோல் எரிச்சல் ஏற்படும்
- உங்களுக்கு ஆசிட்ரிஃப்ளக்ஸ் நோய் இருந்தால் ஆரஞ்சு பழம் மற்றும் ஆரஞ்சு பழத்தோல் பொடி பயன்படுத்துவதை தவிர்க்கவும்
- உங்களுக்கு இரைப்பை குடல் கோளாறு பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகிய பிறகு ஆரஞ்சு தோல் பொடியை பயன்படுத்தவும்
- நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலோ, ஆரஞ்சு பழம் அல்லது ஆரஞ்சு பழத்தோல் பொடியை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகவும்
- புற்றுநோய் எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு, ஹைப்பர் லிமிடெமிக் எதிர்ப்பு மற்றும்
ஆன்டிபயாட்டிக் மருந்துகளுடன் ஆரஞ்சு பழம் அல்லது அதன் தோல் பொடியை சாப்பிடும் முன் மருத்துவரை அணுகவும்
ஆரஞ்சு பழத்தோல் பொடியை பயன்படுத்தும் முறை:
பொடுகை போக்க : தயிருடன் ஆரஞ்சு பழத்தோல் பொடியை கலந்து அதை தலையில் தடவி சுமார் பத்து நிமிடம் கழித்து குளிக்கவும்.
முடி நரைப்பது தடுக்க : இதற்கு ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு பழத்தோல், எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் ஆகியவற்ற நன்கு கலந்து முடியில் தடவி சுமார் 20 நிமிடம் கழித்து குளிக்கவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
பளபளப்பான கூந்தலுக்கு : இதற்கு 2 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து அந்த பேஸ்டை முடியில் தடவி 10 நிமிடம் கழித்து குளிக்கவும்.
முகத்திற்கு : 2 ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடியுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகப்பரு நீங்கும்.
சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மறைய : ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடி சந்தன பொடியுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவும்.