ஒவ்வொரு பெண்ணும் தனது கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, பளபளப்பாக, கருமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் நூற்றுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே இப்படிப்பட்ட கூந்தல் இருக்கும். பலருக்கு பொடுகு, முடி உதிர்தல், வறண்ட முடி, முடி உடைதல், பலவீனமான முடி போன்ற பல பிரச்சனைகள் உள்ளன. இதனால் முடி வளர்ச்சியும் நின்றுவிடுகிறது. வருடங்கள் உருண்டோடினாலும் முடி கொஞ்சம் கூட வளராது. காற்று மாசுபாடு, மோசமான வாழ்க்கை முறை இதற்கு காரணம். ஆனால் பாதாம் எண்ணெயில் சிலவற்றை கலந்து தடவினால் உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். மேலும் முடி தொடர்பான பிரச்சனைகளும் குறையும். எனவே முடி வளர்ச்சிக்கு பாதாம் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று இப்போது பார்க்கலாம்.