Aadi Month 2022: அருள் மழை பொழியும் ஆடி பொறந்தாச்சு....! முதல் நாளில் வீட்டில் அம்மனை தரிசனம் செய்வது எப்படி.?

Published : Jul 16, 2022, 10:02 AM IST

Aadi Month 2022  Amman: ஆடி இந்த ஆண்டு, ஜூலை 17 ஆம் தேதி, ஞாயிறு அன்று ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி மாத முதல் நாளை சிறப்பாகக் கொண்டாட என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

PREV
14
Aadi Month 2022: அருள் மழை பொழியும் ஆடி பொறந்தாச்சு....! முதல் நாளில் வீட்டில் அம்மனை தரிசனம் செய்வது எப்படி.?
Aadi Month 2022

தமிழ் மாதங்களில் மிகவும், புண்ணியமான மாதங்களில் ஒன்றாக கருதப்படுவது ஆடி இந்த ஆண்டு, ஜூலை 17 ஆம் தேதி, ஞாயிறு அன்று ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி பிறந்தாலே நம்முடைய ஊர்களில் விழாக்கள் களை கட்டும். அம்மன் கோவில் திருவிழாக்கள் முதல் ஆபர்கள் வரை எங்கு பார்த்தாலும், கூட்டம் எகிறும். ஆடி முதல் நாளை ஆதி பண்டிகை என்று கொண்டாடுவார்கள். அதன் பின்னர், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை எல்லாம் முக்கிய நாட்கள். இந்த மாதத்தில் முன்னோர்களின் வழிபாடு நற்பலன்களை தரும் என்பது நம்பிக்கை.

24
Aadi Month 2022

ஆடி மாத முதல் நாளை சிறப்பாகக் கொண்டாட என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

வீட்டை சுத்தம் செய்வது அவசியம்:

பொங்கல் பண்டிகை நாட்களில் வீட்டை எப்படி பராமரிப்போமோ..? அது போன்று ஆடி முதல் நாளில் வீட்டை நன்றாக துடைத்து சுத்தம் செய்து, அழகாக கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, மஞ்சள் தெளித்து, விளக்கேற்றுங்கள். 

மேலும் படிக்க...Aadi Month: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஏன் இவ்வளவு முக்கியமானது? அம்மன் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி அறிக

34
Aadi Month 2022

காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து, அம்மனுக்கு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, அம்மனை மனதில் நினைத்துக் கொண்டு, மாவிலைகளோடு, வேப்ப இலை கொத்துகளையும் எடுத்து கொண்டு வந்து உங்களுடைய வீட்டின் முன்புறத்தில் கட்டி வைக்க வேண்டும்.

 மேலும் படிக்க.....Aadi Month -Sun Transit: இன்று நிகழும் சூரியன் பெயர்ச்சியால்...இந்த ராசிகளுக்கு இன்னும் 30 நாட்கள் பொற்காலம்..

44
Aadi Month 2022

அரிசி, பருப்பு, வெல்லம், பழங்கள், உலர் திராட்சை, கற்கண்டு, நாணயங்கள் உள்ளிட்டவற்றை  வாங்கி, அவற்றுடன் தனியே சிவப்பு அல்லது பச்சை நிற பட்டுத்துணியை வாங்கி அம்மனை வழிபடுவது அவசியம். ஒரு வெண்கல சொம்பில் புதிதாய் தண்ணீர் பிடித்து, ஒரு சிட்டிகை மஞ்சள், குங்குமம் சேர்த்து, பூஜை அறையில் வைத்து மனதார அம்மனை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். அப்படி செய்தால், இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு புண்ணியம் ஏறிக்கொண்டே செல்லும். ஒவ்வொரு நாளும் பாவ கணக்கு குறைந்து கொண்டே செல்லும் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க...Aadi Velli Special 2022: செல்வ வளம் தரும் ஆடி வெள்ளி நாளில்...நீங்கள் செய்ய வேண்டிய பூஜைகள், பரிகாரங்கள்..
 

click me!

Recommended Stories