பெண் குழந்தையிடம் பெற்றோர் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்:
1. வேலையில் பாலினம் பார்க்க வேண்டாம்:
பல பெற்றோர்கள் செய்யும் தவறு இதுதான். அதாவது, ஆண்கள் இந்த வேலை தான் செய்ய வேண்டும் பெண்கள் இந்த விளிதான் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள் ஆனால், பாலின் அடிப்படையில் வேலையை ஒருபோதும் பிரிக்கவே கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பம் இருக்கும். விரும்பியதை செய்ய அனுமதிப்பது பெற்றோரின் கடமை. அந்த வகையில், உங்கள் வீட்டு பெண் குழந்தைகள் ஏதேனும் ஒரு வேலையை தேர்ந்தெடுத்தால் அது அவள் செய்யக் கூடாது என்று அவர்களை சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
2. ஆடையில் கட்டுப்பாடு:
ஆடையில் கட்டுப்பாடு அவசியம் தான். ஆனால் எந்த ஆடை சிறந்தது.. எது அணியக்கூடாது என்று அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கவும். ஒருவேளை உங்களது பெண் குழந்தை ஜீன்ஸ், ஷர்ட் அணிய விரும்பினால் அது தவறு இல்லை. ஆனால் இடத்திற்கு ஏற்றவாறு அணிய பழக்கப்படுத்துங்கள்.