3. தர்பூசணி ஜூஸ்
தர்பூசணி ஜூஸை வெயில் காலத்தில் மட்டுமல்ல மழை காலத்திலும் குடிக்கலாம். இதில் பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் காலையில் இதை குடித்து வந்தால் செரிமானம் ஆரோக்கியமாகவும் இருக்கும், உடலை ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்.
4. வாழைப்பழம் மில்க் ஷேக்
வாழைப்பழத்தில் நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் அவை உடலுக்கு பலவிதமான நன்மைகளை வாரி வழங்குகிறது. மழைக்காலத்தில் காலையில் வாழைப்பழத்தில் மில்க் ஷேக் குடித்து வந்தால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். இதனால் சோர்வு, களைப்பு நீங்கும். இதனுடன் நீங்கள் உலர் பழங்களையும் சேர்த்து குடித்தால் அருமையாக இருக்கும்.
இது தவிர நீங்கள் மூலிகையை டீ, சூப் ஆகியவற்றை கூட குடிக்கலாம். இதனால் உடலில் சக்தி அதிகரிக்கும் உடல் ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் இருக்கும். எனவே கண்டிப்பாக குடியுங்கள்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் கொசு வராமல் தடுக்க 'கற்பூரத்தை' இப்படி பயன்படுத்துங்க!!