உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்தியா பல்வேறு மொழிகள், பல்வேறு உணவு, உடைகள் பல்வேறு மதங்கள் என பன்முக கலாச்சாரங்களை கொண்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அழகிய கடற்கரைகள், எழில் கொஞ்சும் வனங்கள், பிரமிப்பூட்டும் மலைத்தொடர்கள் என பாரத தேசத்தில் அழகுக்கு பஞ்சமில்லை.
நாம் நாடு முழுவதும் இயற்கை அழகை கண்டுரசிக்க, சுற்றுலா தலங்களுக்கு செல்ல எந்தவித தடையும் இல்லை; கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் இந்தியாவில் கோடி ரூபாய் கொடுத்தாலும் நாம் செல்ல முடியாத 3 இடங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? அவற்றைபற்றிதான் உங்களுக்கு இப்போது கூறப்போகிறேன்.
பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)
இந்தியாவின் முதன்மையான அணு ஆராய்ச்சி நிலையமான பாபா அணு ஆராய்ச்சி மையம், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் அமைந்துள்ளது. நாட்டின் பிரதமரால் நேரடியாகக் கண்காணிக்கப்படும் அணுசக்தித் துறையின் (DAE) கீழ் இது செயல்படுகிறது. இங்கு பல்வேறு அணு அலைகள் அமைக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.