இந்த சூரியகுமார் யாதவ் ரோஹித் ஷர்மாவுக்காக உயிரையும் குடுப்பான் அவர் இல்லனா இன்னைக்கு நான் ஒண்ணுமில்ல..!

First Published Nov 13, 2020, 9:47 AM IST

ரோஹித் சர்மாவிற்காக தனது விக்கெட்டை எத்தனை முறை வேண்டுமானாலும் இழக்க தயாராக உள்ளதாக சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் மனதை வென்றுள்ளது

ஐபிஎல் டி.20 தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்ரேய்ஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொண்டு விளையாடியது.இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை துரத்தி கொண்டிருந்த போது, அந்த அணியின் துவக்க வீரரான டிகாக் 20 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார், இதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன் குவித்தார்
undefined
இதில் அஷ்வின் வீசிய 11வது ஓவரில் பந்தை தட்டிவிட்டு சிங்கிள் எடுக்க முயன்றார் ரோகித். இருப்பினும் அதற்கு நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த சூரியகுமார் யாதவ் ‘நோ’ சொல்லியிருந்தார். அதற்குள் ரோகித் கிரீஸை கடந்துவிட்டார்
undefined
இரு பேட்ஸ்மேன்களும் ஒரே எண்டில் நிற்க ரோகித்துக்காக க்ரீஸை விட்டு வெளியே சென்று தானாக தனது விக்கெட்டை தியாகம் செய்தார் சூரியகுமார் யாதவ். இந்த செயல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் சூரியகுமார் யாதவ்
undefined
போட்டியின் முடிவில் இது குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவிற்கு எனது விக்கெட்டை நான் தியாகம் செய்திருக்க வேண்டும், என்னை விட இந்த தொடரில் அவர் தான் சிறப்பாக விளையாடி இருந்தார், அவருக்காக நான் விட்டு கொடுத்திருக்க வேண்டும் என பெருந்தன்மையுடன் பேசியிருந்தார்
undefined
தன்னலம் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டை விட்டுகொடுத்த புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட்டு “தன்னலமில்லாத சூர்யா” என்று பதிவிட்டிருந்தது.இதற்கு பதிலளிக்கும் வகையில் சூர்யகுமார் யாதவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “ரோஹித் சர்மாவிற்காக எப்போது வேண்டுமானாலும் எனது விக்கெட்டை விட்டு கொடுப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்
undefined
click me!