ஐபிஎல் 2020: சொல்லி அடித்த கில்லிடா சிஎஸ்கேவின் சிங்கம் வாட்சன்..!

First Published Oct 5, 2020, 1:48 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சொல்லிவைத்து அடித்துள்ளார் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சிஎஸ்கேவிற்கு இந்த சீசன் நல்ல தொடக்கமாக அமையாதபோதிலும், பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபார வெற்றியை பெற்று செம மாஸாக கம்பேக் கொடுத்துள்ளது சிஎஸ்கே அணி.
undefined
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே, அதன்பின்னர் ஹாட்ரிக் தோல்வியடைந்தது. 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.
undefined
ரெய்னா, ஹர்பஜன் இந்த சீசனில் ஆடாதது சிஎஸ்கேவிற்கு பின்னடைவாக அமைந்தது. ராயுடு, பிராவோ ஆகியோரும், ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அதனால் அணி காம்பினேஷனே வலுவாக இல்லாமல் இருந்தது.
undefined
சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சனுக்கும் முதல் சில போட்டிகள் சரியாக அமையவில்லை. டுப்ளெசிஸ் மட்டுமே நன்றாக ஆடிவந்தார். அதனால் சிஎஸ்கே அணியின் சிக்கல் அதிகரித்தது. இனிமேல் நன்றாக ஆடுவதற்கான கூறே இல்லை என்று தெரிந்ததாலும் ராயுடுவின் கம்பேக்காலும் முரளி விஜயை நீக்கிய சிஎஸ்கே அணி, ஷேன் வாட்சன் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளித்தது.
undefined
ஷேன் வாட்சன், 2018 ஐபிஎல் ஃபைனலில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியவர். அவரது கம்பேக்கிற்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும் என்பதால் அவருக்கு தொடர் வாய்ப்பளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, அவர் பயிற்சியில் அபாரமாக ஆடியதால், அவர் மீது நம்பிக்கை வைத்தது சிஎஸ்கே அணி நிர்வாகம்.
undefined
அதை வீணடிக்காத ஷேன் வாட்சன், பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆடி 30 பந்தில் அரைசதம் அடித்து, தனது கிளாசான பேட்டிங்கை சிஎஸ்கேவிற்காக மீண்டுமொரு முறை வழங்கினார்.
undefined
டுப்ளெசிஸுடன் இணைந்து சிறப்பாக ஆடி கடைசிவரை களத்தில் நின்று 53 பந்தில் 83 ரன்களை குவித்து, அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். டுப்ளெசிஸும் 87 ரன்களுடன் ஆட்டமிழக்கவில்லை. ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் தொடக்க வீரர்களான வாட்சனும் டுப்ளெசிஸூமே சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்தனர்.
undefined
ஐபிஎல்லில் எவ்வளவு படுமோசமான தோல்விகளுக்கு பிறகும் வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கும், பின்னர் ஃபைனலுக்கும் முன்னேறி கோப்பையை வெல்லும் உத்தி அறிந்த சிஎஸ்கே அணி, இந்த சீசனில் செம கம்பேக் கொடுத்துள்ளது.
undefined
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஷேன் வாட்சன், இந்த போட்டிக்கு முன்பாகவே, சிஎஸ்கேவிற்கு அருமையான போட்டி ஒன்று காத்திருக்கிறது என்று தன் மீதும் தன் அணி மீதும் கொண்ட நம்பிக்கையால், முன்கூட்டியே பதிவிட்ட டுவீட்தான்.
undefined
தான் நன்றாக ஆடி அடுத்த போட்டியில் சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடிக்கொடுக்க போகிறேன் என்ற நம்பிக்கையில், போட்டிக்கு ஒரு டுவீட் போட்டிருந்தார் ஷேன் வாட்சன். பஞ்சாப்புக்கு எதிரான போட்டி நேற்று(அக்டோபர்4) நடந்த நிலையில், அதற்கு முந்தைய நாளான 3ம் தேதியே, சிஎஸ்கேவிற்கு செம மேட்ச் காத்திருக்கிறது என்று டுவீட் போட்டிருந்தார். அதேபோலவே நேற்றைய போட்டியில் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் வாட்சன். இதையடுத்து அவரது டுவீட் இப்போது செம வைரலாகிவருகிறது.
undefined
click me!