ஐபிஎல் 2020: கோலி, டிவில்லியர்ஸுக்கு ஐபிஎல் தடை போடணும்..! கேஎல் ராகுலின் பகீர் கோரிக்கை

First Published Oct 14, 2020, 10:52 PM IST

விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவருக்கும் ஐபிஎல் தடைவிதிக்க வேண்டுமென கேஎல் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய 3 அணிகளில் ஆர்சிபியும் டெல்லி கேபிடள்ஸும் நன்றாக ஆடிவருகின்றன. ஆனால் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை நழுவவிட்டது.
undefined
இதுவரை இந்த சீசனில் ஆடிய 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது பஞ்சாப் அணி. வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் கடைசி ஒருசில ஓவர்களில் செய்யும் தவறுகளால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு தோல்விகளை அடைந்தது பஞ்சாப் அணி.
undefined
பஞ்சாப் அணி அடைந்த ஒரே வெற்றி ஆர்சிபி அணிக்கு எதிராகத்தான். ஆர்சிபிக்கு எதிராக 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது பஞ்சாப் அணி. அபார வெற்றியை பதிவு செய்த ஆர்சிபிக்கு எதிராகத்தான் நாளைய போட்டியில் ஆடுகிறது பஞ்சாப் அணி.
undefined
இந்த போட்டி ஷார்ஜாவில் நடக்கவுள்ள நிலையில், இரு அணிகளின் கேப்டன்களும் உரையாடினர். அப்போது, கேஎல் ராகுல் முதல்முறையாக கேப்டன்சி செய்வது உள்ளிட்ட விராட் கோலியின் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்தார்.
undefined
அப்போது, டி20 கிரிக்கெட்டில் எந்த விதி மாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று ராகுலிடம் கோலி கேட்டார். அதற்கு பதிலளித்த ராகுல், உங்களையும்(கோலி) டிவில்லியர்ஸையும் அடுத்த சீசனில் ஐபிஎல் தடை விதிக்க வேண்டும். நீங்கள் நிறைய சாதித்துவிட்டீர்கள். ஐபிஎல்லில் 5,000 ரன்கள் உட்பட ஏகப்பட்ட சாதனைகள். எனவே அது போதும்.. இனிவரும் இளம் வீரர்கள் அதேமாதிரியான சாதனைகளை செய்ய வழிவிடுங்கள் என்று கோலி மற்றும் டிவில்லியர்ஸை விதந்தோதும் விதமாக தெரிவித்தார்.
undefined
click me!