தோனி கிரிக்கெட் கெரியரில் இப்படி நடந்ததே இல்ல.. கடைசியில் ஒரு சின்ன பையன் ஏய்ப்பு காட்டிட்டாப்ள..!

First Published Sep 26, 2020, 7:03 PM IST

தோனியின் கிரிக்கெட் கெரியரில், விக்கெட் கீப்பிங்கில் அவரை ஏமாற்றிய ஒரே வீரர் பிரித்வி ஷா மட்டுமே.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நேற்று டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே இடையே நடந்த போட்டியில், அனுபவ சிஎஸ்கே அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி கேபிடள்ஸ் அணி..
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 175 ரன்களை குவித்தது. அதற்கு முக்கிய காரணம், இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா. தொடக்கம் முதலே அடித்து ஆடிய பிரித்வி ஷா, 43 பந்தில் 64 ரன்களை விளாசினார். அவர் அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தால் தான், கடைசி ஓவர்களில் டெல்லி கேபிடள்ஸ் வீரர்கள் பெரியளவில் ஸ்கோர் செய்யாத போதிலும் அணியின் ஸ்கோர் 175ஐ எட்டியது.
undefined

Latest Videos


ஆனால் பிரித்வி ஷா இன்னிங்ஸின் 2வது பந்திலேயே அவுட்டாகியிருக்க வேண்டியவர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்து, பிரித்வி ஷாவின் பேட்டில் உரசிச்சென்றது. ஆனால் சத்தம் எதுவுமே கேட்காததால், விக்கெட் கீப்பர் தோனி, பவுலர் தீபக் சாஹர் என யாருமே அதற்கு அப்பீல் செய்யவில்லை. தோனிக்கே கேட்கவில்லை என்றபோது, அம்பயருக்கு கேட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
undefined
தோனி மிகவும் ஷார்ப்பான விக்கெட் கீப்பர். லேசாக சத்தம் கேண்டிருந்தாலும் சுதாரித்திருப்பார். ஆனால் சுத்தமாக சத்தமே கேட்கவில்லை. இவ்வளவுக்கும் பார்வையாளர்களே இல்லாமல் போட்டி நடப்பதால், ஸ்டேடியமே அமைதியாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் அந்த சத்தம் கேட்கவில்லை. அதனால் பிரித்வி ஷா தப்பினார்.
undefined
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அதை பிரித்வி ஷா கையாண்ட விதம். ஆம்... பந்து பேட்டில் உரசிய சத்தம் யாருக்குமே கேட்கவில்லை என்றாலும், அந்த விஷயம் பேட்ஸ்மேனான பிரித்வி ஷாவிற்கு தெரிந்திருக்கும். பொதுவாக பந்து பேட்டில் பட்டுச்சென்றால், பெரும்பாலான பேட்ஸ்மேன்கள், பின்னால் திரும்பி விக்கெட் கீப்பரை பார்த்து, பந்து பேட்டில் பட்டதை அவர்களே காட்டிக்கொடுத்துவிடுவார்கள்.
undefined
ஆனால், பிரித்வி ஷா எதுவுமே நடக்காததுபோல், எதார்த்தமாக நின்றார். அதனால் யாருக்கும், அது பேட்டில் பட்டதா என்பது குறித்த ஐடியாவே இல்லை. பின்னர் ரீப்ளேவில் தான் அது தெரிந்தது. ஒருவேளை பிரித்வி ஷா இன்னிங்ஸின் 2வது பந்திலேயே ஆட்டமிழந்திருந்தால், போட்டியின் முடிவே மாறியிருக்கக்கூடும்.
undefined
click me!