ஐபிஎல் 2020: என்ன ஆனாலும் சரி; அவரை மட்டும் டீம்ல இருந்து தூக்கவே முடியாது! சிஎஸ்கே கோச் ஃப்ளெமிங் திட்டவட்டம்

First Published Oct 3, 2020, 11:57 AM IST

சிஎஸ்கே அணியில் இவர் ஏன் இருக்கிறார் என்று பலருக்கும் சந்தேகத்தை எழுப்பிய ஒரு வீரரின் ரோலை தெளிவுபடுத்தி, அவர் அணியில் இருப்பார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங்.
 

ஐபிஎல் 13வது சீசன், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு கொடுங்கனவாக அமைந்துள்ளது. ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு சென்றதுடன், 8 முறை ஃபைனலுக்கு முன்னேறி, அதில் 3 முறை கோப்பையை வென்ற ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி சிஎஸ்கே.
undefined
ஆனால் இந்த சீசனில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி.
undefined
ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகிய சீனியர் வீரர்கள் இந்த சீசனில் ஆடாததால், வலுவான அணி காம்பினேஷன் அமையவில்லை. முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக வெற்றியை தேடிக்கொடுத்த ராயுடு, அடுத்த 2 போட்டிகளில் ஆடாததால் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது.
undefined
தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன், முரளி விஜய் தொடர்ச்சியாக சொதப்பினர். ஷேன் வாட்சனாவது பரவாயில்லை; முரளி விஜய் முதல் போட்டிகளில் ஆடி மொத்தமாகவே 32 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
undefined
அணி காம்பினேஷனை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்த சிஎஸ்கே அணி, சன்ரைசர்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில், முரளி விஜய், ஹேசில்வுட், ருதுராத் கெய்க்வாட் ஆகிய மூவரையும் நீக்கிவிட்டு, அம்பாதி ராயுடு, பிராவோ, ஷர்துல் தாகூர் ஆகிய மூவரையும் சேர்த்தது. அதனால் அணி காம்பினேஷன் வலுவாக இருப்பதாகவே தெரிந்தது.
undefined
ஆனாலும் சன்ரைசர்ஸுக்கு எதிராகவும் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சிஎஸ்கே அணி. சன்ரைசர்ஸ் நிர்ணயித்த 165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 42 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்த போட்டியில் தோனி ஐந்தாம் வரிசையில் களத்திற்கு வந்து கடைசி வரை களத்தில் நின்றார். ஆனாலும் அவரால் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை.
undefined
ஆனாலும் சன்ரைசர்ஸுக்கு எதிராகவும் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சிஎஸ்கே அணி. சன்ரைசர்ஸ் நிர்ணயித்த 165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 42 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்த போட்டியில் தோனி ஐந்தாம் வரிசையில் களத்திற்கு வந்து கடைசி வரை களத்தில் நின்றார். ஆனாலும் அவரால் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை.
undefined
அதற்கு காரணம், மிடில் ஓவர்களில் அதிகமான பந்துகள் சிங்கிள் கூட எடுக்கப்படாமல் வீணடிக்கப்பட்டதுதான். முரளி விஜய் சரியாக ஆடவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தது மட்டுமல்லாது, அவர் தேறமாட்டார் என்பதை உணர்ந்துதான் அவரை அணியிலிருந்து நீக்கியது சிஎஸ்கே. ஆனால் அவரைப்போலவே, அணியில் ஏன் இருக்கிறார் என்ற கேள்வியை அனைவருக்கும் எழுப்பிய ஒரு வீரர் கேதர் ஜாதவ்.
undefined
கேதர் ஜாதவ் எந்த பேட்டிங் ஆர்டரில் இறக்கிவிட்டாலும் சரியாக ஆடுவதில்லை; பவுலிங்கும் போடுவதில்லை. எதுவுமே சரியாக செய்யாத அவர் அணியில் எதற்கு? என்ற கேள்வி ரசிகர்களுக்கு இயல்பாகவே எழுகிறது. கேதர் ஜாதவ் சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் 4ம் வரிசையில் இறக்கிவிடப்பட்டார். 10 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 7 பந்துகளை வீணடித்ததுதான் மிச்சம்.
undefined
கேதர் ஜாதவின் தொடர் சொதப்பலை கண்ட ரசிகர்களும் முன்னாள் வீரர்களும், சிஎஸ்கேவில் கேதர் ஜாதவின் ரோல் தான் என்ன? அவர் ஏன் தோனிக்கு முன் இறக்கிவிடப்பட்டார்? மிடில் ஓவர்களிலும் சரியாக ஆடுவதில்லை; பெரிய ஷாட்டுகளை அடித்து ஃபினிஷ் செய்யும் திறனும் இல்லை. பிறகு ஜாதவ் அணியில் எதற்குத்தான் இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
undefined
இந்நிலையில், சிஎஸ்கே அணியில் ஜாதவின் ரோலை தெளிவுபடுத்தியுள்ளார் தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங்.
undefined
இதுகுறித்து பேசியுள்ள ஸ்டீஃபன் ஃப்ளெமிங், கேதர் ஜாதவ் தான் சிஎஸ்கே அணியின் 4ம் வரிசை வீரர். கேதர் ஜாதவிற்கு 2 ரோல் இருக்கிறது. சிஎஸ்கே அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்தால், மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடுவதற்காக 4ம் வரிசையில் இறக்கப்படுவார். விரைவில் விக்கெட்டுகளை இழக்காமல் பெரிய ஸ்கோரை நோக்கிச்சென்றால், அவருக்கு முன் தோனி இறங்குவார் என்று தெரிவித்தார்.
undefined
கேதர் ஜாதவ், அவர் ஆடிய கடைசி 17 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் ஒரேயொரு முறை மட்டுமே 30 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!