நீங்க வேணா பாருங்க.. அடுத்த சீசனில் அவரை ஆர்சிபி கழட்டிவிட்ருவாங்க..! நெஹ்ரா அதிரடி

First Published Nov 8, 2020, 4:42 PM IST

ஆர்சிபி அணியின் பிரச்னை குறித்து அந்த அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசனில் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் கனவு இந்த சீசனிலும் தகர்ந்தது. பிளே ஆஃபிற்கு முன்னேறிய ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.
undefined
விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸையே அதிகமாக சார்ந்திருக்கும் ஆர்சிபி அணிக்கு இந்த சீசனில் தேவ்தத் படிக்கல் நம்பிக்கையளித்தார். ஃபின்ச், கிறிஸ் மோரிஸின் சேர்க்கை ஆர்சிபி அணியை வலுப்படுத்தும் என கருதப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை.
undefined
இந்த சீசனில் ஆர்சிபி அணியின் பவுலிங் நன்றாக இருந்தாலும், கோலி, டிவில்லியர்ஸ் சொதப்பியதால், இந்த சீசனிலும் கோப்பை கனவு தகர்ந்தது.
undefined
இந்நிலையில், ஆர்சிபி அணியின் பிரச்னை குறித்து பேசிய அந்த அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா, ஆர்சிபி அணி கோலி மற்றும் டிவில்லியர்ஸையே அதிகமாக சார்ந்திருக்கிறது. அவர்கள் இருவரை சுற்றியே அந்த அணி இயங்குகிறது. மற்ற அணிகளில் எல்லாம் ஐந்து வீரர்கள் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள். ஆனால் ஆர்சிபியில் கோலியும் ஏபிடியும் மட்டுமே இருக்கிறார்கள். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும் இதே பிரச்னை தான்.
undefined
ஒவ்வொரு சீசனிலும் ஏராளமான மாற்றங்களை செய்கிறார்கள். 4-5 வீரர்களையாவது நறுக்குனு பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஆர்சிபி அணியில் கோலி, டிவில்லியர்ஸ், சாஹலை தவிர வேறு யாருமே நிரந்தரமில்லை. ஸ்டோய்னிஸ், ஹெட்மயர் ஆகிய இருவரையும் கழட்டிவிட்டனர். இந்த சீசனில் ஆர்சிபியில் ஆடிய ஃபின்ச், அடுத்த சீசனிலும் அவர் ஆர்சிபிக்கு ஆடுகிறாரா? அவரை ஆர்சிபி அணி தக்கவைக்கிறதா என்று பார்க்க ஆவலாக இருப்பதாக நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
undefined
click me!