ஐபிஎல் 2020: நீயெல்லாம் தேறவே மாட்ட; சீட்டை தேய்க்காம கிளம்பு.. சிஎஸ்கேவில் இருந்து விரட்டப்பட்ட சீனியர் வீரர்

First Published Oct 2, 2020, 1:09 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், சிஎஸ்கே அணி இதுவரை நம்பி வாய்ப்பு கொடுத்துவந்த ஒரு வீரரை தூக்கி எறிகிறது.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு இந்த சீசனில் நல்லவிதமான தொடக்கம் அமையவில்லை. முதல் 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
undefined
ஐபிஎல்லில் ஆடிய அனைத்து சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி, 8 சீசன்களில் ஃபைனலுக்கு முன்னேறி, அதில் 3 முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமைகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்கார அணி சிஎஸ்கே.
undefined
ஆனால் இந்த சீசனில் அந்த அணியின் நட்சத்திர வீரரான ரெய்னா ஆடாததன் தாக்கம் கடுமையாக உள்ளது. பேட்டிங் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது. வழக்கமாக, எப்போதுமே நல்ல பேலன்ஸான அணியாக திகழும் சிஎஸ்கே, கடைசி 2 போட்டிகளில் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தும் முனைப்பில் சரியாக ஐந்து பவுலர்களுடன் களமிறங்கியது. அதுவே பின்னடைவாகவும் அமைந்தது.
undefined
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அம்பாதி ராயுடுவின் அதிரடி அரைசதத்தால் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, அடுத்த 2 போட்டிகளில் அவர் ஆடாததால், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவியது.
undefined
ராயுடு இல்லாததால், பேட்டிங் ஆர்டர் பலவீனமாக இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. டுப்ளெசிஸ் மட்டுமே எல்லா போட்டிகளிலும் நன்றாக ஆடினார். ஷேன் வாட்சனுக்கு இன்னும் இந்த சீசன் கிளிக் ஆகவில்லை. இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 2 அரிய வாய்ப்புகளை வீணடித்துவிட்டார். அவரும் விரைவில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
undefined
ராயுடு, பிராவோ ஆகிய வீரர்கள் ஆடாததால், அணி வலுவான சமநிலையை பெறாமல் இருந்தது. அதன்விளைவாக, பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தும் முனைப்பில், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் களமிறங்கினார் தோனி. அதனால் சரியாக ஐந்து பவுலர்களுடன் களமிறங்க வேண்டிய கட்டாயம் உருவானது. அதனால் கூடுதல் பவுலிங் ஆப்சன் இல்லாமல் போனது. அதுவே பாதிப்பாகவும் அமைந்தது.
undefined
ரெய்னா இந்த சீசனில் இல்லாததால் சிஎஸ்கே அணியின் ஆடும் லெவனில் வாய்ப்பு பெற்ற முரளி விஜய், தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டார். முதல் போட்டியில் 7 பந்தில் ஒரு ரன் அடித்த முரளி விஜய், அடுத்த போட்டியில் 21 பந்தில் 21 ரன்களும், டெல்லிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 10 ரன்களும் அடித்தார்.
undefined
என்னை ஏன் டீம்ல எடுத்தீங்க.. தூக்கிடுங்க என்று இவரே சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் சொல்லும் வகையில் இருந்தது அவரது பேட்டிங். முரளி விஜய் பவர்ப்ளேயில் பந்துகளை வீணடிப்பது மட்டுமல்லாது, அதை களத்தில் செட்டில் ஆகி, பெரிய இன்னிங்ஸ் ஆடி ஈடுகட்டாமல், பந்துகளை வீணடித்துவிட்டு மட்டுமே செல்வதால், பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு சிக்கல் அதிகரிக்கிறது.
undefined
எனவே பேலன்ஸான அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருக்கும் நிலையில், சன்ரைசர்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடியான மாற்றங்கள் இருக்கும். அதில் முதல் மாற்றம் முரளி விஜய் தான். காயத்திலிருந்து மீண்டுவிட்ட அம்பாதி ராயுடு, சன்ரைசர்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆடுவார் என்பதால், முரளி விஜய் கண்டிப்பாக நீக்கப்படுவார். சிஎஸ்கேவின் 2 தோல்விகளுக்கு முரளி விஜய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனவே அவர் கண்டிப்பாக நீக்கப்பட்டு, இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஷேன் வாட்சனுடன் தொடக்க வீரராக இறக்கப்படலாம்.
undefined
தொடக்க வீரராக ருதுராஜோ அல்லது ராயுடுவோ இறங்கலாம். ஆனால் ஆடும் லெவனில் கண்டிப்பாக முரளி விஜய்க்கு இடம் கிடையாது என்பது மட்டும் உறுதி.
undefined
click me!