ஐபிஎல் 2020: RR vs KKR: இந்த ஒரு காரணம் போதும்; அந்த அணி கண்டிப்பா தோத்துரும்.. முன்னாள் வீரர் அதிரடி

First Published Sep 30, 2020, 4:19 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும் என காரணத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசனில் துபாயில் இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதல் 2 போட்டிகளிலும் அபாரமாக ஆடி மாபெரும் வெற்றிகளை பெற்றுள்ளது. சிஎஸ்கே அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயித்த 224 ரன்கள் என்ற கடின இலக்கை வெற்றிகரமாக விரட்டி வரலாற்று சாதனை படைத்தது. அதே நம்பிக்கையுடன் கேகேஆரையும் வீழ்த்தும் முனைப்பில் ராஜஸ்தான் அணி உள்ளது.
undefined
கேகேஆர் அணி, முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்றாலும், அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. எனவே வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் கேகேஆரும் உள்ளது.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸில், பட்லர், ஸ்மித், சஞ்சு சாம்சன் என அதிரடி படை இருக்கிறதென்றால், கேகேஆரில் ஷ்ப்மன் கில், நிதிஷ் ராணா, இயன் மோர்கன், ரசல் என இளமையும் அனுபவமும் கலந்த கலவையான சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே இரு அணிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
undefined
இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர், ஸ்மித், சாம்சன் என டாப் ஆர்டர் வலுவாக இருந்தாலும், டெவாட்டியா, உத்தப்பா, ரியான் பராக் என மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதை சுட்டிக்காட்டி, கேகேஆர் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டாப் பேட்டிங் ஆர்டர் இருக்குமளவிற்கு மிடில் ஆர்டர் வலுவாக இல்லையென்றாலும்,, பஞ்சாப்புக்கு எதிராக ராகுல் டெவாட்டியா சிறப்பாக ஆடினார். அவர் ஸ்பின் பவுலிங்கில் திணறினாலும், ஃபாஸ்ட் பவுலிங்கை சிறப்பாகவே எதிர்கொண்டு ஆடினார். எனவே அவர் ஃபினிஷர் ரோலுக்கு தகுதியானவர் தான் என்பதால், அவருக்கு ஃபினிஷர் ரோல் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
undefined
click me!