ஐசியூ-வில் இருந்த 29 வயது இளம்பெண் அலறி கூச்சல்.. 3 மாதத்திற்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Published : Jan 29, 2026, 03:22 PM IST

அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், மருத்துவமனை ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். சுயநினைவு திரும்பியதும் அவர் கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். 

PREV
13

குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 29 வயது இளம்பெண் ஒருவர் தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அரை மயக்க நிலையில் படுக்கையில் இருந்த அவரை அக்டோபர் 20ம் தேதி அதிகாலையில் ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

23

சுயநினைவு திரும்பிய அப்பெண் அலறி கூச்சலிட்டதை அடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பித்தார். இதுகுறித்து பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை பார்க்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் தந்தை கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர்.

33

பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குணமடைந்த அப்பபெண் சபர்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோருடன் வசித்து வரும் அப்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவத்தின் போது பணியில் இருந்த ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories