உத்தரப் பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் எட்டு வருடங்களாகக் காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஒருவர், இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் தனது முதல் மனைவியால் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டார். மனைவியை கைவிட்டுவிட்டு, வேறு திருமணம் செய்துகொண்டதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹர்தோய் மாவட்டம், சந்திலா பகுதியைச் சேர்ந்த ஷீலு (Sheelu) என்பவரின் கணவர் ஜிதேந்திரா என்கிற பப்லு (Jitendra alias Bablu) 2018-ம் ஆண்டு, ஷீலு கர்ப்பமாக இருந்தபோது அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர், அவர் பஞ்சாபில் உள்ள லூதியானாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.