விலை மதிப்பற்ற ஆபரணங்கள்
12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மன்னர்கள் வெள்ளி, தங்கம், வைரம், வைடூர்யம் என ஏராளமான விலை மதிப்பற்ற ஆபரணங்களை காணிக்கையாக அளித்தனர். பக்தர்களும் பல்வேறு நகைகளை தானமாக வழங்கியுள்ளனர். இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தும் கோவிலுக்குள்ளேயே அமைந்துள்ள ரகசிய அறையான ரத்ன பண்டார் என்ற பொக்கிஷ அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இரண்டு பொக்கிஷ அறை உள்ள நிலையில் ஒரு அறையில் உள்ள நகைகள் கடவுளுக்கு திருவிழாக்காலங்களில் அணிவிக்கப்பட்டு மீண்டும் பாதுகாக்கப்படும் அறை. இதில் உள் அறையான பிடார் பண்டார், கடந்த 38 ஆண்டுகளாகத் திறக்கப்படவில்லை.