லயா என்ற மாணவி, நீர்வீழ்ச்சியில் மூழ்கிய ஒரு பெண்ணைப் பற்றிய கதையை எழுதினார், அதில், வரவிருக்கும் பேரபத்து பற்றி இரண்டு நண்பர்களை எச்சரிக்க ஒரு பறவையாக திரும்பி வருகிறார். கடந்த ஆண்டு தனது பள்ளி இதழில் எழுதிய கதையில் “ மழை பெய்தால், நிலச்சரிவுகள் அருவியைத் தாக்கும், மனித உயிர்கள் உட்பட அவர்களின் பாதையில் உள்ள அனைத்தையும் மூழ்கடிக்கும்" என்று எழுதி உள்ளார்.