சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், டிஜிட்டல் தகவல் திரைகள், நவீனமயமாக்கப்பட்ட கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட பெர்த் டிசைன், அதிக பிரைவசி தரும் மூடிய கேபின்கள் மற்றும் ஸ்லைடிங் கதவுகள் போன்றவை இந்த ரயிலின் சிறப்பம்சங்கள். மேலும், மேல் பெர்த்துக்கு ஏறுவதற்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வசதியான படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பயணத்தின்போது ஏற்படும் குலுக்கலைக் குறைத்து, இதமான பயணத்தை உறுதி செய்வதற்காக, இதில் நவீன சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைவான நிறுத்தங்களுடன் இயக்கப்படுவதால், தற்போதுள்ள பல இரவு நேர ரயில்களை விட பயண நேரம் கணிசமாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.