வட மாநிலங்களில் உள்ள எக்ஸ்பிரஸ்வேக்களில் இந்த வசதிகள் தொடங்கப்பட்டாலும், தமிழக வாகன ஓட்டிகளிடையே இதற்கான எதிர்பார்ப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னை - திருச்சி - மதுரை, சென்னை - பெங்களூரு, மற்றும் கோவை - சேலம் போன்ற தமிழ்நாட்டின் மிக முக்கியமான, பரபரப்பான தேசிய நெடுஞ்சாலைகளிலும் இந்தத் தரமான பஞ்சர் மற்றும் வாகன பழுதுபார்ப்பு மையங்களை (WSA) உடனே கொண்டு வர வேண்டும் எனத் தமிழகப் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மக்களின் இந்தத் தேவையைப் புரிந்துகொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், இந்தத் திட்டத்தை வெறும் எக்ஸ்பிரஸ்வேக்களோடு மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்துப் பழைய மற்றும் புதிய தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் (Pan-India expansion) கொண்டு செல்ல தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதன் மூலம், கூடிய விரைவில் தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளிலும் 40 முதல் 60 கிலோமீட்டருக்கு ஒருமுறை அதிநவீன பழுதுபார்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, தமிழக மக்களின் நெடுஞ்சாலைப் பயணங்கள் முற்றிலும் பாதுகாப்பானதாக மாறவுள்ளது!
இதையும் படிங்க : Bluetooth-க்கு அந்த பெயர் எப்படி வந்தது? அடடே இதுதான் காரணமா?