ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணைகளை வாங்கியதால், அமெரிக்கா இந்த முடிவை எடுத்தது. ஆனால், இந்தியா ஏற்கனவே இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதால், நவீன போர் விமானத்தை விற்க முன்வந்துள்ளது அமெரிக்கா. எஃப்-35 போர் விமானம் உலகின் மிகவும் நவீன மல்டி-ரோல் ஸ்டெல்த் ஜெட் விமானமாக அறியப்படுகிறது.
இது ஸ்டெல்த், உயர்ந்த சென்சார்கள், நெட்வொர்க்கிங் அமைப்புகள், நவீன ஆயுத அமைப்புகளின் கலவையால் போர்க்களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவரை இந்த போர் விமானம் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ளது. இப்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.