பறவைக் காய்ச்சல்: மனிதர்களுக்குப் பரவுமா? அறிகுறிகள், தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் என்ன.?

Published : Feb 14, 2025, 03:03 PM ISTUpdated : Feb 14, 2025, 03:05 PM IST

ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் பறவிக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்த காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டு இறந்ததாக தகவல் வெளியானது. இதனிடையே பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுமா? என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? இந்த விவரங்களை ஆராய்வோம்.

PREV
14
பறவைக் காய்ச்சல்: மனிதர்களுக்குப் பரவுமா? அறிகுறிகள், தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் என்ன.?
பறவைக் காய்ச்சல்: மனிதர்களுக்குப் பரவுமா? அறிகுறிகள், தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் என்ன.?

தென் மாநிலங்களில் உள்ள ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பறவைக் காய்ச்சல் பரவல் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் மக்கள் கோழி மற்றும் முட்டைகளை உட்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கோழி உட்கொள்ள வேண்டாம் என்று அரசு அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளது. ஒரு சில பகுதிகள்  சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் குடியிருப்பாளர்கள் கோழியைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, மேலும் மறு அறிவிப்பு வரும் வரை பழங்குடியினர் நலப் பள்ளிகள் வழங்கப்பட்டு வந்த உணவுகளில் இருந்து கோழி நீக்கப்பட்டுள்ளது. 

 

24
பறவைக்காய்ச்சலால் உயிர் பலி- வதந்திகள்

ஏலூரு மாவட்டம் உங்குதுரு மண்டலத்தில் பறவைக்காய்ச்சலால் ஒருவர் இறந்ததாக வெளியான தகவல் வெளியானது, இந்த தகவல் வதந்திகள் பொய் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஏலூரு மாவட்ட ஆட்சியர் கே. வெற்றிசெல்வி இந்த வதந்திகளை மறுத்து, உண்மைகளை சரிபார்க்காமல் தவறான தகவல்களைப் பரப்புவதைக் கண்டித்தார். அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்காமல் பொய்யான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 

34
பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்

இது மனிதர்களுக்குப் பரவுமா?

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும், குறிப்பாக கோழிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களுக்கு. பாதிக்கப்பட்ட கோழிகளுடன் நேரடித் தொடர்பு மற்றும் பின்னர் கண்கள் அல்லது வாயைத் தொடுவது வைரஸைப் பரப்பும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  இருப்பினும், பறவைக்காய்ச்சல் மனிதர்குக்கு பரவுவது அரிது எனவும் கூறுகின்றனர்.  வைரஸ் 70°C இல் இறந்துவிடும், மேலும் கோழி பொதுவாக 100°C இல் சமைக்கப்படுகிறது, இதனால் வைரஸ் அழிக்கப்படுகிறது என தெரிவித்தனர். 

அறிகுறிகள்:

மனிதர்களில் அதிக காய்ச்சல், கடுமையான தொண்டை புண், உலர் இருமல், தலைவலி, சோர்வு, உடல் வலி, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் சிவந்த கண்கள் ஆகியவை அடங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

44
கோழியை எப்படி பாதுகாப்பாக சமைப்பது:

பறவைக் காய்ச்சல் அச்சங்களுக்கு மத்தியில் கோழியை சமைக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கோழியை நன்கு சமைக்கவும், பச்சைக் கறியுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்கவும் (கையுறைகளைப் பயன்படுத்தவும்), மேலும் வைரஸைக் கொல்ல 70°C  வெப்பநிலையில் சூடுபடுத்தி சமைக்கவும். சமைப்பதற்கு முன் முகமூடி அணிந்து கோழியை வெந்நீரில் கழுவவும். பாத்திரங்களை நன்கு கழுவி வெயிலில் உலர வைக்கவும். பச்சைக் கோழியைக் கையாண்ட பிறகு உங்கள் கண்கள் அல்லது மூக்கைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தத் தகவல் பொது அறிவிற்காக மட்டுமே. உடல்நலம் தொடர்பான ஆலோசனைக்கு மருத்துவரை அணுகவும்.

click me!

Recommended Stories