இந்த உத்தரவை எதிர்த்து, 'தேர்ட் ஐ' (Third Day) என்ற யூடியூப் சேனல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட இந்த தடை உத்தரவு, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை (அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(a)) பறிக்கும் வகையில் உள்ளது என மனுவில் வாதிடப்பட்டது. மேலும், தர்மஸ்தலா கோயில் வழக்கில் மாநில அரசின் உயர் மட்ட விசாரணையை இந்த உத்தரவு தடுப்பதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வழக்கறிஞர் முதலில் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஏற்கனவே, கர்நாடக அரசு தர்மஸ்தலா கோயில் வழக்கில் வழக்கின் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.